புதன், 12 ஜூலை, 2017

கவியரசர் இளந்தேவன் கவிதைத்தாயிடம் விடைபெற்றார்



கவியரசர் இளந்தேவன்

மாரடைப்பால் இன்று (ஆனி 28,2048 / சூலை 12, 2017) மாலை
 மரணம் .


"நம் காலத்து மகாகவி
நம்மைக் கடந்து போகிறான்
சபையே சற்று எழுந்து நில்லுங்கள் "

என்று வார்த்தைச்சித்தர் வலம்புரி சான்
அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்டவர்.

கவியரங்கக் கவிதைகளின் கதாநாயகன்
கவியரசர் இளந்தேவனின் மறைவு
இலக்கிய உலகத்திற்கும்
அவரது குடும்பத்தார்க்கும்
ஈடுசெய்ய முடியாத இழப்பு

 +++++++++++++++
இளந்தேவன் இரங்கற்பா
**************************

கம்பநதி நீஎங்கே ?கவிச்சிகரம் நீஎங்கே?
பொங்கிவரும் புதுப்புனலே எங்கே?--எங்கள்
சந்ததிக்குக் கவிநெய்து தன்மானம் காக்கவந்த
சந்தத்தமிழ் சரித்திரமே எங்கே ?
. (கம்பநதி நீஎங்கே....?.)

போதைதரும் சொல்லெடுத்துப்
பொன்மாலை கட்டிவைத்துப்
போட்டழகு பார்த்தகவி எங்கே ?

காதுகளில் கவுரவங்கள்
கால் கோள் நடத்தவிட
காற்றுவழி தூதுசொல்லஎங்கே ?

மோதவரும் பகைநெருப்பை
மோனையிலேயே தணிக்கவரும்
முகையவிழ்ந்தமுல்லைநீ எங்கே?

சோதிக்கே சோதிதர
சொக்கவைக்கும் பாட்டெடுக்கும்
சுடர்முகமே சுவைத்தமிழே எங்கே ?

தன்மானத் தாய்ப்பாலில்
தழைத்துவந்த கவித்தேக்கே
தனிவானச் சூரியனே எங்கே ?

என்கால மகாகவி
எழுந்துநீ நடந்திருக்க
எட்டுத்திசை எழுந்துவரும் !எங்கே ?

பொன்னுருக்கி இழைப்பாவில்
பொற்கால வரி யெடுத்துப்
போட்டுநெய்த கவியரசே எங்கே ?

இன்னுமொரு நூற்றாண்டு
இளந்தேவன் நூற்றாண்டு
என்னும்படி வாழ்ந்திருப்பாய்
எங்கே ?

**********************************************
கவிக்கோ துரைவசந்தராசன்.
************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக