சனி, 16 ஏப்ரல், 2016

பெற்றோர்களிடம் சொல்லி 100% வாக்களிக்கச் செய்யுங்கள்!


மாணிக்கவாசகம்பள்ளி, வாக்காளர் விழிப்புணர்வு04 :manikkavasakarpalli_therthalvizhippunarvu04

பெற்றோர்களிடம் சொல்லி 100% வாக்களிக்கச் செய்யுங்கள்

வட்டாட்சியர் பேச்சு

தேவகோட்டை: – தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் 100  விழுக்காடு வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு வண்ணக்கோலப் போட்டி நடை பெற்றது.
  விழாவிற்கு வந்திருந்தவர்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் வரவேற்றார். தேவகோட்டை தேர்தல் துணை வட்டாட்சியர் சேது நம்பு, வருவாய் ஆய்வாளர் மயில்வாகணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேவகோட்டை வட்டாட்சியர் மங்களேசுவரி தலைமை தாங்கிப் பேசுகையில், நீங்கள் அனைவரும் உங்கள் பெற்றோரிடமும், உங்கள் வீட்டருகே உள்ள அனைவரிடமும் சொல்லி  வாக்களிக்கச்  செய்யுங்கள். வாக்களிக்க நீண்ட நேரம் ஆகும் என  அஞ்ச வேண்டா. இப்போது தேர்தல்ஆணையம் புதிய நடைமுறை கொண்டுவந்துள்ளது. 1950 என்ற எண்ணில்  ‘கியூ /Q’ என்றஎழுத்தையும், வாக்குச் சாவடி எண்ணையும் தட்டச்சிட்டு உங்கள் அலைபேசி வழியாகக் குறுஞ்செய்தி அனுப்பினால் உங்கள் வாக்குச் சாவடியில் எத்துனையாவது ஆளாக நீங்கள் வரிசையில் உள்ளீர்கள் என்பதைச் சொல்லும் வகையில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை நீங்கள் அனைவருக்கும் சென்று பகிர்ந்துகொள்ளுங்கள். மாற்றுத் திறனாளிகளுக்குத் தேர்தல் ஆணையமே வாகனம் ஏற்பாடு செய்து அவர்களை அழைத்துச் சென்று வாக்களிபதற்கு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இலவசங்கள் எதையும் வாங்காமல் அனைவரும் வாக்களிக்க நீங்கள் உங்கள் பெற்றோரிடம் வலியுறுத்தவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
  வாக்காளர் உறுதி மொழி அனைவராலும் சொல்லபட்டது. 100  விழுக்காடு வாக்களிப்பது, மே 16 வாக்களிக்கும்  நாள், வாக்களிப்பது நமது கடமை என்பன போன்ற வாக்காளர் விழிப்புணர்வு  முழக்கங்களுடன் பெற்றோர்கள் சத்யா,பெரிய நாச்சி ,சூரியா மாணவிகள் தனம், சௌமியா, சுருதி  ஆகியோர்  வண்ணக்கோலங்கள் வரைந்தனர். கோலங்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
  நிகழ்ச்சியில் வாக்களிப்பதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நாடகம், கும்மிப் பாட்டு, ஆங்கில உரை, தமிழ் உரை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வருவாய் உதவியாளர்  இர‌மேசு, ஊர் நிருவாக உதவியாளர் சந்திர சேகர், பெற்றோர்கள்  முதலான பலர் கலந்து கொண்டனர்.
நிறைவாக ஆசிரியர்  சிரீதர் நன்றி கூறினார்.

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

jeyamchok@gmail.com
www.kalviyeselvam.bl

விருது(SHIELD) பெறுதல் புதுமையான துய்ப்பு – தொடக்க நிலை மாணவர்கள் கருத்து




விருது(SHIELD) பெறுதல் புதுமையான துய்ப்பு

– தொடக்க நிலை மாணவர்கள் கருத்து

1 ஆம் வகுப்பு படிக்கும்போதே விருது (shield)  பெற்றது நெகிழ்ச்சியான , மகிழ்ச்சியான நிகழ்வு – 1 ஆம் வகுப்பு மாணவி திவ்யசிரீ பேச்சு
 பாராட்டு விருது பெறும் நிகழ்வு அரசு உதவி பெறும் பள்ளியில் உள்ள 1 ஆம் வகுப்பு முதல் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மகிழ்ச்சியான நிகழ்வு
  நண்பர்களே! தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் விசாலயன்கோட்டை சேது பாசுகரா வேளாண்மைக் கல்லூரியில் மரம் நட்டதைப் பாராட்டும் விதமாக விருதுகள் வழங்கப்பட்டன. முதலில் பரிசுப் பொருள் கொடுக்கலாம் என நினைத்தோம்; பின்பு  1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரிக்குச் சென்று  அவர்கள் மரம் நட்டதைப் பாராட்டும்  வகையில் விருது (shield) வழங்கலாம் என முடிவு செய்து பள்ளியில் வழங்கினோம்.
விருது (shield) முதன் முறையாகப் பார்க்கும் பெற்றோர்
 ஏறத்தாழ 90 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். பெருவாரியான பெற்றோர்கள் விருது  என்பதை நாங்கள் இப்போதுதான் பார்க்கிறோம். அது எப்படி இருக்கும் என்பதை பார்த்துச் செல்லவே வந்தோம். விருதுகளை எங்கள் பிள்ளைகள் பெறும்போது மிகுந்த  மகிழ்ச்சியாக இருந்தது என்றனர்.
 விருதுக்கேடயத்தைப்  பத்திரமாக வைத்து கொள்வோம்
   விருது பெற்றுக்கொண்ட    1ஆம் வகுப்பு மாணவி திவ்யசிரீ முதல்  8 ஆம் வகுப்பு மாணவி சௌமியா வரை பேசிய அனைத்து மாணவ,மாணவியரும் இந்த நிகழ்வு எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு ஆகும். எங்கள் காலம் உள்ள வரை இதனைப் பத்திரமாக வைத்துப் பாதுகாப்போம் என்று  ஆனந்தக் கண்ணீர் மல்கப் பேசினார்கள். நாங்களும் பிற்காலத்தில் பலருக்கு இது போன்று விருது வழங்குவதுடன், நாங்களும் பெறவும் செய்வோம் என்றனர்.
 தலைமை ஆசிரியரின்  பட்டறிவு.
 நண்பர்களே!  எனக்கு விவரம் தெரிந்து எனது பள்ளியில், கல்லூரியில் பல பரிசுகளைப் பெற்றுள்ளேன். அவை அனைத்தும்  பதக்கம்(மெடல்) ஆக இருக்கும் அல்லது பாராட்டுச் சான்றிதழாக இருக்கும். உண்மையில் விருது என்பதை  நான், பன்னாட்டு இளநிலைக்கழகத்தில்(JCI) சேர்ந்த பிறகுதான் செயல்பாடுகளுக்குப் பாராட்டு பெறும் வகையில் பெற்றேன். அதன் பிறகு தொடர்ந்து பெற்று வரும் விருது பலவற்றை எனது வீட்டிலும் பள்ளியிலும் பத்திரமாக வைத்து உள்ளேன். அவற்றை எப்போதெல்லாம் பார்க்கிறோமோ அப்போதெல்லாம் நமது செயல்பாடுகள் நமக்கு மகிழ்ச்சி தரும்.
அனைத்து மாணவர்களுக்கும்  விருதுபெறல் புதுமை
   எனவே  அரசு உதவி பெறும் பள்ளியான இப் பள்ளி மாணவர்களுக்கு இளம்அகவையில் விருது வழங்கினால் நன்றாக இருக்கும், புதிய  துய்ப்பறிவாக இருக்கும் என்று எண்ணினோம். அதன் தொடர்ச்சிதான் இந்த விருது (shield) வழங்கும் விழா. அதுவும் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் விருது (shield) வழங்கப்பட்டது. இது மாணவர்களுக்கும் எனக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும்  விருது பெறும் உங்களுக்கும் ,பெற்றோர்களுக்கும் நிச்சயம் மறக்க முடியாதமகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கும் என்பது உண்மை.
துய்ப்பறிவு புதுமை என்பதன் பயன்
 மேலும் தனம், தனலெட்சுமி ஆகிய மாணவிகள் இருவர்  கடந்த இரண்டு ஆண்டுகளில் தாங்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பல ஊர்களுக்குச் சென்று வந்தது தொடர்பான தங்களது  ‘கற்றலில் முன்னேற்றம்;  துய்ப்பறிவு புதுமை’ என்பதை விளக்கிப் பேசினர்; அத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளில் தாங்கள் பெற்றுள்ள 25க்கும் மேற்பட்ட சான்றிதழ்களையும் காண்பித்துத் தங்களின் கற்றல் செயல்பாடுகள் குறித்து  விளக்கினர். இதனைக்கேட்ட வேளாண்கல்லுரி தாளாளர் சேது குமணன், மாணவிகள் துணிவாக,  மேடையில் குறிப்பு எதுவும் இல்லாமல், அருமையாகப் பேசியதைப் பாராட்டி, அம்மாணவிகளின் உயர்கல்விக்குத் தான் பொறுப்பேற்று படிக்க வைப்பதாக மேடையில் உறுதி அளித்தார்.
கல்வியில் சிறந்து பாராட்டு பெறுவது வாழ்த்தப் பட வேண்டியது ஆகும்.
 இலெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
 பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்
9786113160
jeyamchok@gmail.com
www.kalviyeselvam.blogspot.com

மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கோவில்பட்டியில் வைகோ போட்டி




மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கோவில்பட்டியில் வைகோ போட்டி

 

மதிமுக போட்டியிடும் 29 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ இன்று (சித்திரை 03, 2047 / ஏப்பிரல் 16, 2016) சென்னை அண்ணாநகரில் வெளியிட்டார்.

 

மதிமுகவின் 29 வேட்பாளர்கள் பட்டியல் 

  (சொடுக்கிப் பார்க்கவும்)

 

 


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் சில தொகுதிகள் மாற்றம்

 

 

 

புதுவையில் 

ம.தி.மு.க. 4 தொகுதிகளில் போட்டி