பன்னாட்டுப்பாடசாலை- கூட்டம்01 : international_school01

பன்னாட்டுப் பாடசாலைகள் தொடர்பாக

100 க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன

 மாகாணக்கல்வியமைச்சர்

 வேலுசாமி இராதாகிருட்டிணன்

 இலங்கையில் எதிர்காலத்தில்  ஆதாய நோக்கத்துடன்  தொடங்கப்படும் வணிக நிலையங்களைப்போலப் பன்னாட்டுப் பாடசாலைகளைத் தொடங்க முடியாது. பன்னாட்டுப் பாடசாலைகள் தொடர்பாக கல்வி அமைச்சுப் புதிய சட்டங்களைக் கொண்டுவருவதற்கு எற்பாடுகளை மேற்கொண்டுள்ளது  பன்னாட்டுப் பாடசாலைகள் தொடர்பாகத் தனக்கு 100 மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என  மாகாணக்கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.
பன்னாட்டுப் பாடசாலைகள் தொடர்பாகவும் அதன் செயற்பாடுகள் தொடர்பாகவும்  சிறப்புக் கூட்டம்  ஆக.11.2016   மாணாகக்கல்வி  அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் தலைமையில் மாணாகக்கல்வி அமைச்சின்  செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் மாணாகக்கல்வி அமைச்சின் செயலாளர் திச ஏவாவிதான முதலான கல்வி அமைச்சின்  மூத்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்,
 “இன்று இலங்கையில் பன்னாட்டுப் பாடசாலைகள் நாள்தோறும் தொடங்கப் படுகின்றன. இவற்றின் தரம் தொடர்பாக அல்லது இவற்றின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதற்கு என்று  ஓர்  அமைப்பு அல்லது  ஓர் அமைச்சு இல்லை. கல்வி அமைச்சு, தனியார்  பன்னாட்டுப்  பாடசாலைகள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை அதற்குக் காரணம் அவர்களுக்கு  எங்களுடனான எவ்விதமான தொடர்புகளும் இல்லை. அவர்கள்  நிறுவனச் சட்டத்தின் கீழ்ப் பதிவு செய்து தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். நிறுவனச் சட்டம் என்பது ஒரு தனியார் நிறுவனமாகவே கருதப்படுகின்றது. அது எந்தச் சூழலிலும் கல்வி அமைச்சுடன் தொடர்புபடுவதில்லை.
  உலகத்திலே எங்குமே இல்லாத ஒரு நிலை,  பன்னாட்டுப் பாடசாலைகள் தொடர்பாக இலங்கையில் இருக்கின்றது. பெட்டிக்கடைகள் போடுவதுபோல நாற்தோறும்  பன்னாட்டுப் பாடசாலைகள் ஏற்படுத்தப்படுகின்றன. இந்தப் பாடசாலைகள் ஒரு சில வீடுகளிலும் நடைபெறுகின்றன.
  ஆசிரியர்கள் என்பவர்கள் கல்வித்தகைமையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தெரிவு செய்யப்படமுடியாது. அவர்களின் பல்வேறுவிதமான திறமைகள் அவர்களுக்கான முறையான பயிற்சிகள் வழிகாட்டல்கள் எனப் பல துறைகளிலும்  ஓர் ஆசிரியரைச் செதுக்கி எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் க.பொ.த  இயல்பு தரம், க.பொ.த உயர்தரம் ஆகியவற்றின் பெறுபேறுகளை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவரை ஆசிரியராக நியமிக்க முடியாது. ஆனால் இன்று  பெரும்பான்மையான தனியார் பன்னாட்டுப் பாடசாலைகளில் இருக்கின்ற ஆசிரியர்களின் நிலை இப்படித்தான் இருக்கின்றது. இதற்குக் கடந்த காலங்களில் இந்த நாட்டில் கல்வி அமைச்சர்களாக இருந்தவர்கள் கட்டாயமாக  விடை கூற வேண்டும்.
  பன்னாட்டுப் பாடசாலைகளுக்கென்று ஒரு நடைமுறை, அவை பின்பற்ற வேண்டிய ஒழுக்கக் கோவைகள், என ஒரு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எமது கல்வி அமைச்சர் அகிலவிராசு காரியவசமும்  பன்னாட்டுப் பாடசாலைகள் தொடர்பாக ஒரு நல்ல முறையான வேலைத்திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே இருக்கின்றார்.
  நாங்கள் இன்று இந்தக் கூட்டத்தில் தீர்மானித்திருக்கின்றோம். பன்னாட்டுப் பாடசாலைகள் தொடர்பாக எவ்வாறான நடைமுறைகளைப் பின்பற்றுவது, அதற்கான நியமங்கள் என்ன அதற்கான வரைமுறைகள் பதிவு தொடர்பாக இருக்க வேண்டிய அடிப்படைத் தகைமைகள் என ஒரு செயற்திட்டத்தை உருவாக்குவதற்காக எமது  மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் திச ஏவாவிதான தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் இது தொடர்பாக ஆராய்ந்து முழுமையான அறிக்கை ஒன்றை எதிர்வரும் 25.08.2016 அன்று நடைபெறவுள்ள கூட்டத்தில்  ஆளிக்க  இருக்கின்றார்கள்.
,,அவர்களின் அறிக்கை கிடைக்கப்பட்ட பின்பு அது தொடர்பாக ஆராய்ந்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும். இன்று இந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்காவிட்டால்  பன்னாட்டுப் பாடசாலைகளில் கல்வி பயில்கின்ற மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும். எமது பெற்றோர்கள் மிகுந்த  இடர்ப்பட்டு பாடசாலைக் கட்டணங்களைச் செலுத்தி  வருகிறார்கள்; அவர்கள் எடுக்கும் முயற்சி வீணாகப் போய்விடும்.”
  பன்னாட்டுப் பாடசாலைகள் தொடர்பாகத் தனக்கு 100 மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்   அவர் அங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்
பன்னாட்டுப்பாடசாலை- கூட்டம்03 : international_school03 பன்னாட்டுப்பாடசாலை- கூட்டம்02 ;international_school02
பெயர்-பா.திருஞானம் : peyar_paa.thirugnanam02