சு.மாதவன், செம்மொழி ஆளுமை விருது : madhavan-virudhu

மா.மன்னர் கல்லூரிப் பேராசிரியருக்குத் தமிழ்ச்செம்மொழி ஆளுமை விருது 

கரந்தைத் தமிழ்ச் சங்கம் வழங்கியது!

  அண்மையில் நடந்த தமிழவேள் உமா மகேசுவரனார்  கரந்தைக் கலைக் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு – பவழ விழாவில் அக் கல்லூரியின் முன்னாள் மாணவரும் புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியின் தமிழ் உதவிப் பேராசிரியருமான முனைவர் சு. மாதவனுக்குத் தமிழ்ச் செம்மொழி ஆளுமை விருது வழங்கப்பட்டுள்ளது . இவ்விருதை அழகப்பாப் பல்கலைக்  கழகப் பதிவாளர் முனைவர் வி.பாலச்சந்திரன் வழங்கினார்.
 இவர் குடியரசுத் தலைவர் வழங்கிய செம்மொழி இளந்தமிழறிஞர் விருதையும் ஏற்கெனவே பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது