அழை-கருப்புயூலை : karuppu yulai, brittan
  பிரித்தானியத் தமிழர் பேரவையினரால் எதிர்வரும் 
ஆடி 10. 2047 / சூலை மாதம் 25  ஆம்  நாள்
அன்று இலண்டனில் 33ஆம் ஆண்டு
கருப்பு  யூலை நினைவு  நாள் கூட்டம்
ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
  இலங்கையில் தொடர்ச்சியாகத் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் தொடர்பில் எதுவித  நிலையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது   பன்னாட்டுக் குமுகாயம் தொடர்ச்சியாகப் பல தவறுகளை மேற்கொண்டு வருகின்றது.  குறிப்பாக, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக 1956, 1958, 1977, 1983ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்படட இன அழிப்பு தொடர்பில்  பன்னாட்டுக் குமுகாயத்தின் பாராமுகமே 2009ஆம் ஆண்டின் மிகப்பெரிய இன அழிப்புக்குத் தூண்டு கோலாக அமைந்திருந்தது. தமிழருக்கான சரியான பாதுகாப்பு பொறிமுறைகள், அரசியல் அதிகாரங்கள் தொடர்பில் பன்னாட்டுக் குமுகாயம் சரியான அணுகுமுறைகளைக் கையாண்டு இருந்திருந்தால் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புக்களைத் தவிர்த்து இருக்கலாம்.
  எனினும் பன்னாட்டுக் குமுகாயம் இன்றுவரை இலங்கை தொடர்பிலும் அங்கு நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு தொடர்பிலும் தனது அணுகு முறை தொடர்பில்  தொடர்ச்சியாகத் தவறு இழைக்கின்றது. இது தொடர்பான கருப்பொருளை வலியுறித்தி இந்த நினைவு நாள் கூட்டம் பிரித்தானியத் தமிழர் பேரவையினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.