வட்டுக்கோட்டை இந்துஇளைஞர் சங்கத்தினால்

வீடு  சீரமைப்பிற்காக  உரூ.50,000 பெறுமதியான

பொருட்கள் அன்பளிப்பு 

  வட்டுக்கோட்டை இந்து  இளைஞர்(வாலிபர்) சங்கத்தினால் கடந்தகாலப்போரில் தன் இரு கண்களையும் இழந்து நான்கு பிள்ளைகளுடன் பல இன்னல்களுடன் வாழ்ந்து வரும்   கீரிமலை வீதி சித்தங்கேணியைச் சேர்ந்த மா.குணரத்தினம் என்பவருக்கு இவ் வீடு  சீரமைப்பிற்கான உதவி (சித்திரை 24, 2047 / மே7,2016) வழங்கப்பட்டுள்ளது.
  மா.குணரத்தினம் வட்டுக்கோட்டை இந்து  இளைஞர் சங்கத்திடம்  விண்ணப்பம் விடுத்திருந்தார். இதன்படி, வீடு  சீரமைப்பிற்காக  அவரது வீட்டில் சனிக்கிழமை(7/05/2016), கூரைத்தகடுகள், காரைக்குழாய்கள், கம்பிகள்,  வீட்டுவேலைகளுக்கான கூலி உட்பட  50,083 உரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி அன்பளிப்பினை எமது புலம்பெயர் உறவான, ஆத்திரேலியா நாட்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் ஆரூரன்  வழங்கியுள்ளார். இவருக்கு எமது சங்கத்தின் சார்பிலும் பயனாளி சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக்கொள்கின்றோம். மேலும் குணரத்தினத்தின் பிள்ளைகளின் எதிர்காலக் கல்வியைக் கவனத்தில் கொண்டு எமது மாதமுறை கல்வி உதவித் தொகை கொடுப்பனவு திட்டத்திலும் சேர்க்கபட்டுள்ளனர்.
இந்து இளைஞர் சங்கம், வட்டுக்கோட்டை
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]