மக்கள் நலக்கூட்டணியின் வலு கூடுகிறது

தே.தி.மு.க.-மக்கள் நலக்கூட்டணியில்  வாசனின் தலைமையில் இயங்கும் தமிழ் மாநிலக் காங்கிரசு இணைந்துள்ளது.  தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் 20 தொகுதிகளைத் தே.மு.தி.க.வும் 3 தொகுதிகளை ம.தி.மு.க.வும் ஒவ்வொரு தொகுதியைப் பிற 3 கட்சிகளும் என 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.
இதனால் போட்டியிடும் கட்சிகளின் தொகுதி எண்ணிக்கை பின்வருமாறு உடன்பாட்டிற்கு வந்துள்ளது :
தே.மு.தி.க. – 104 தொகுதிகள்
ம.தி.மு.க. – 29 தொகுதிகள்
விடுதலைச் சிறுத்தைகள் – 25 தொகுதிகள்
மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி – 25 தொகுதிகள்
இந்தியப பொதுவுடைமைக் கட்சி – 25 தொகுதிகள்
த.மா.கா. – 26 தொகுதிகள்
மக்கள் நலக்கூட்டணியுடன் தே.தி.மு.க. இணைந்த பொழுதே பிற கட்சிகளுக்குக் கிலி பிடித்ததாகவும்  இப்பொழுது மேலும் அச்சம் கூடியுள்ளதாகவும் எனவே  தே.தி.மு.க.வை உடைக்க முயல்வதுபோல் அக்கட்சிகள், த.மா.க.வை உடைக்கும் முயற்சிகளில் ஈடுபடும் என்றும் அரசியலே் நோக்கர்கள் கூறுகின்றனர்.