மாணிக்கவாசகம் பள்ளி, அறிவியல்நாள்01 :nighazh_thesiyaariviyalnaal_maanikkavasakampalli01 மாணிக்கவாசகம் பள்ளி, அறிவியல்நாள்02 : nighazh_thesiyaariviyalnaal_maanikkavasakampalli02

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் நாள் விழா கொண்டாடப்பட்டது.
 
விழாவிற்கு வந்தவர்களை மாணவி காயத்திரி வரவேற்றார்.பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கி, தேசிய அறிவியல் நாள் தொடர்பாகவும், அதன் சிறப்பு குறித்தும் விளக்கமாக பேசினார்.
ஆசிரியை செல்வமீனாள் அறிவியல் ஆய்வுகளை எளிய முறையில் மாணவர்களுக்குச் செய்து காண்பித்துச் செயல் விளக்கம் அளித்தார்.
விழாவில் 6ஆம் வகுப்பு மாணவி காவியா, சென்னை அக்கினி கல்வி நிறுவனங்களின் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில்  பங்குபெற்று இளையோர் பிரிவில் வெற்றி பெற்று ள்ளாள்;  சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான கண்காட்சியில் கலந்து கொள்ளவும் தேர்வு பெற்றுள்ளாள்.
  இம்மாணவியையும் பயிற்சி அளித்த முத்து மீனாள்  ஆசிரியையையும் விழாவில் பாராட்டிச் சிறப்பித்தனர்.
  இக்கண்காட்சியில் மாணவர்கள் சுமித்திரா, பிரவீனா, நந்தகுமார், பூவதி ஆகியோர் கலந்து கொண்டனர். 6 முதல் 8 வகுப்பு வரை ஏறத்தாழ 120  பேர் பங்கேற்ற இப்போட்டிகளில்  அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி அளவில் கலந்துகொண்ட ஒரே பள்ளி இப்பள்ளி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி அண்ணா கோளரங்கத்தில் தமிழ்நாடு அறிவியல் மையத்தின் சார்பாகத் தேசிய அறிவியல் நாளை முன்னிட்டு ‘நம்மைச் சுற்றி அறிவியல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் இரஞ்சித்து, பிரவீனா, வினாடி வினா போட்டியில் கலந்துகொண்ட கண்ணதாசன், தனம் ஆகியோருக்கும், இம்மாணவர்களுக்குப் பயிற்சி அளித்ததுடன் தேவகோட்டையில் இருந்து  திருச்சி அழைத்துச் சென்ற ஆசிரியை வாசுகிக்கும் பாராட்டு  வழங்கப்பட்டது.
திருச்சி அண்ணா அறிவியல் மையத்தில் நடைபெற்ற போட்டிகளில் சிவகங்கை, இராமநாதபுரம்  மாவட்டத்தில் இருந்து கலந்துகொண்ட ஒரே பள்ளி இப்பள்ளி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவி பரமேசுவரி நன்றி  நவில விழா நிறைவுற்றது.