செவ்வாய், 19 ஜனவரி, 2016

சப்பானில் சல்லிக்கட்டை வலியுறுத்தி மாபெரும் ஓவியப்போட்டி!


அழை-சப்பான்தமிழ்ச்சங்கம், ஓவியப்போட்டி : sappan thamizhchangam_sallikkattu

சப்பானில்

சல்லிக்கட்டை வலியுறுத்தி மாபெரும் ஓவியப்போட்டி.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்துகள்!!
நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக இந்த ஆண்டு மாசி 01, 2047 / பிப்பிரவரி 13ஆம் நாள் நடைபெறவிருக்கும் நமது பொங்கல்விழாவை முன்னிட்டுச் சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பொங்கல் சிறப்பு ஓவியப்போட்டி நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த வருடம் சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்குமாகச் சேர்த்து மொத்தம் மூன்று இடங்களில் நடத்தப்படவுள்ளது.
நடைபெறும் இடங்கள்:
1.கொஅனா இன்டர்நேசுனல்,கவாசாகி
[Kohana International school,Kawasaki]
2.சேய்சின்சோ சமூக கூடம், நிசிகசாய்
[Seishinchou community hall,Nishi Kasai]
3. யூஆர் அரங்கம்,ஓசிமா
[UR Hall, Ojima]
கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு ஓவியத்தாள்கள் அளிக்கப்படும்.
வண்ணப்பூச்சுகள் மற்றும் வண்ணக்கரிக்கோல்களை கொண்டுவரவும்.
வெற்றிபெறுபவர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் உண்டு.
கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளும்படிக் கேட்டுக்கொளகிறோம்.
தொடர்புக்கு:-  japantamilsangam@gmail.com
பொறுப்பாளர்கள் :
கவாசாகி:
திரு.தேசிங்கு
திரு.இளையராசா
நிசிகசாய் தோக்கியோ :
திரு. பிரசன்னா
திரு.சங்கர்
ஓசிமா தோக்கியோ:
திரு.ப.கலைச்செல்வன்
திரு.பத்மநாபன்
திரு.பெ.கலைச்செல்வன்
சல்லிகட்டை வலியுறுத்தி நடத்தப்பெறும் இப்போட்டியில் தாய்த்தமிழுறவுகள் பெருவாரியாகக் கலந்துகொண்டு ஆதரவை நல்கிடக் கேட்டுக்கொள்கிறோம்.
இங்ஙனம்
சப்பான் தமிழ்ச்சங்கம்
சே சதீசுகுமார்

அகரமுதல 116, தை 03, 2047 / சனவரி 17, 2016
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக