பெரம்பலூர் -புத்தகத்திருவிழா02 :perambalur-puthagathiruvizhaa02

அயலகத் தமிழ்ப் படைப்பாளிகள் கவனத்திற்கு

தமிழ் நாடு பெரம்பலூாில் ஒவ்வோர் ஆண்டும் புத்தகத்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 2016 ஆம் ஆண்டுக்கான புத்தகத்திருவிழா சனவரி 29  ஆம் நாள் தொடங்கி  பிப்பிரவாி 7  ஆம் நாள் வரை நடைபெற உள்ளது.
இதில் வெளிநாட்டுவாழ் தமிழா்களின் புத்தகங்களை விற்பதற்கான தனி அரங்கு அமைக்கப்பட உள்ளது.
இந்த அரங்கில். வெளிநாட்டில் வாழும் தமிழ்ப் படைப்பாளிகள் தங்கள் புத்தகங்களை அனுப்பி வைத்தால், அவை தனி அரங்கில் வைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படும். வெளிநாட்டு வாழ் தமிழ் படைப்பாளிகள் குறித்து வாசகா்கள் அறிந்து கொள்ள ஏதுவாகும்.
இந்த அரங்கில் பெரம்பலூர் மாவட்டப் படைப்பாளிகளின் படைப்பு நூல்களும் வைக்கப்பட்டு பெரம்பலூர் பகுதி எழுத்தாளா்களுக்கான கண்ணியமும் வழங்கப்படஉள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சோ்ந்த படைப்பாளிகளும் தங்கள் நூல்களை அனுப்பி வைக்கலாம்
இதன் மூலம் பெரம்பலூர் மாவட்டப் படைப்பாளிகள் தனி அடையாளம் பெறுவாா்கள். பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவா் தரேசு அகமது பெரம்பலூர் மாவட்ட எழுத்தாளா்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த வாய்ப்பைக் கொடுத்து உள்ளாா்.
எனவே. உலக அளவில் பரவி உள்ள தமிழ் எழுத்தாளா்களும், பெரம்பலூர் மாவட்ட எழுத்தாளா்களும் தங்களது படைப்புகளை அனுப்பித்தர கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
தங்களின் நண்பா்கள் படைப்பாளிகளாக இருப்பின் அவர்களுக்கும் தகவல் தந்து அவர்களின் படைப்புகள் வாசகா்களைச் சென்றடைய உதவுங்கள்.
இந்த அரங்கிற்கு திரு.தாகிர் பாட்சா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளாா்.
எனவே அவரை உடன் தொடா்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தொடா்பு முகவரி :
திரு தாகிர் பாட்சா
அரசு மகளிர் விடுதி எதிர்ப்புறம்
காந்தி நகர், அம்பாவூர் அஞ்சல் 621103
பெரம்பலூர் மாவட்டம்
தமிழ்நாடு
[Tr.E.Dhahir Batcha
opp: Govt. Girl Hoster
Ghandi Nagar
Aumbavur Post 621 103
Perambalur Dist.
Tamil Nadu ]
 மின் வரி : edbatcha@yahoo.com
பேசி : 0091-9842491363
முதுவை இதாயத்து
mudhuvai hidayath01