செவ்வாய், 3 நவம்பர், 2015

அரசால் வழங்கப்பட்ட நிலம் விற்பனை!

நிலம்: land

முதலக்கம்பட்டி ஊராட்சியில்

அரசால் வழங்கப்பட்ட

2 காணி(ஏக்கர்) நிலம் விற்பனை

 தேவதானப்பட்டி அருகே உள்ள முதலக்கம்பட்டி ஊராட்சியில் கடந்த தி.மு.க.ஆட்சியில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட 2 காணி(ஏக்கர்) விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் முறையிடுகின்றனர்
 முதலக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சங்கரமூர்த்திபட்டி, முதலக்கம்பட்டி மேடு, சருக்கரை ஆலை ஆகிய பகுதிகளில் பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் 2 காணி(ஏக்கர்) நிலம் வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்படும் நிலத்திற்குப் பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இலவசமாக வழங்கப்பட்ட நிலங்களான 2 காணி(ஏக்கர்) நிலம், பூமிதான நிலம், பஞ்சமி நிலம் போன்றவற்றை விற்பனை செய்யக்கூடாது என விதி உள்ளது. இந்நிலையில் 2 காணி(ஏக்கர்) நிலத்தையொட்டி அமைந்த தொழிற்சாலைகள், அகழ்களங்கள்(கல்குவாரிகள்) வைத்திருப்பவர்கள், தொழிலதிபர்கள்  இடைத்தரகர்கள் உதவியுடன் 2 காணி(ஏக்கர்) நிலத்தைக் கவர்ந்து  வேலி அடைத்து அதன்பின்னர் பயனாளிகளை அழைத்து மிரட்டி இடத்தை எழுதி வாங்கிக்கொள்கின்றனர்.
  இதில் சில பயனாளிகள் தங்கள் இடத்தை அளந்து தரவேண்டும் எனப் பெரியகுளம் நிலஅளவை வட்டாட்சியரிடம் முறையிட்டுப் பல ஆண்டுகள் ஆகியும் அளந்து கொடுக்க முன்வராததால் 2 காணி(ஏக்கர்) நிலம் வாங்கிய பயனாளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் எங்குள்ளது எனத் தெரியாமல் அலைகின்றனர். இதனைப் பயன்படுத்திப் போலி ஆவணம் உருவாக்கி 2 காணி(ஏக்கர்) நிலம் விற்பனை செய்யப்படுகிறது.
  எனவே மாவட்ட நிருவாகம் 2 காணி(ஏக்கர்) நிலத்தை முறையாக ஆய்வு செய்து விற்பனை செய்பவர்கள் மீதும் 2 காணி(ஏக்கர்) நிலத்தை வன்கவர்ந்து செய்து வைத்துள்ளவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதிப் பயனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.
 peyarvaigaianeesu_101


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக