Thamizhannai01

தமிழணங்கை வணங்குவோம்!


காதிலங்கு குண்டமாகக் குண்டலகே

                சியுமிடையே கலையாச் சாத்தன்

ஓதுமணி மேகலையும் ஒளிர்கைவளை

                யாவளையா பதியும் மார்பின்

மீதணிசிந் தாமணியாச் சிந்தாம

                ணியுங்காலில் வியன்சி லம்பாத்

திதில்சிலப் பதிகார மும்புனைந்த

                தமிழணங்கைச் சிந்தை செய்வோம்!

- சங்குப் புலவர்