21. கள்ளி
இதன் முள் பிளவு பட்டதாய் இருக்கும். இதன் காய் வெடிக்கும் பொழுது மிகுந்த ஒலி உண்டாகும்.
 ‘கவைமுள் கள்ளிக் காய்விடு கடுநொடி
வெண்பூதியார்: குறுந்தொகை:174:2
(நொடி – ஒலி)
கள்ளிமரத்தின் காய்கள் வெயிலில் வெடிக்கும்.
 ‘பொரிகால் கள்ளி விரிகாய் அம்கவட்டு
மருத்துவன் சீத்தலைச் சாத்தனார்: குறுந்தொகை: 154:5
 22. காஞ்சி
காஞ்சி மரம் மெல்லிய கிளைகளை உடையது. பூக்கள் பசிய  பூந்தாதுக்கள் உடையனவாய் நறுமணம் கமழும். பயற்றங் கொத்துகள் போல பூங்கொத்துகள் இருக்கும்.
 ‘பயறுபோல் இணர பைந்தாது படீஇயர்
(உழவர் வாங்கிய) கமழ்பூ மென் கிளைக்
காஞ்சி
ஓரம்போகியார்: குறுந்தொகை: 10:2-4 22.
 23. காந்தள் (கோடல்,தோன்றி)
காந்தள் பூக்கள் குருதி போன்று சிவப்பாகப்  பூக்கும்; கொத்தாக இருக்கும்.
குருதிப் பூவின  இலைக் காந்தள்
திப்புத் தோளார் : குறுந்தொகை: 1-14
 காந்தள்,மலையைச் சுற்றி வேலிபோல் இயற்கையாய் வளரும்.
 காந்தள் வேலி ஓங்குமலை
கிள்ளி மங்கலங்கிழார்: குறுந்தொகை: 76:1
காந்தள் வேலி
குறுந்தொகை: 100:3
 காந்தள் மலர் மலைமுழுவதும் மணம் வீசும் அளவு நறுமணம் மிக்கது.
 சிலம்புடன் கமழும் அலங்குலை
ஆசிரியர் பெருங்கண்ணனார்: குறுந்தொகை:239:4

காந்தள் மலர் பல கோடுகள் உடைய பாம்பின் படம் சுருங்குவது போன்று இதழ் குவிந்து காட்சியளிக்கும்.(கொண்டல் காற்றில் உதிர்ந்து விழும் இயல்புடையது.)
 பல்வரிப்
பாம்புபை அவிழ்ந்தது போலக் கூம்பிக்
கொண்டலின் தொலைந்த ஒண்செங் காந்தள்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்:குறுந்தொகை: 185:4-6
(செங்)காந்தள்  ஒளி மிகுந்ததாயும் இதன்  குவிந்தும் காணப்பெறும்.  சேவலின் கொண்டையைப் போல் இருக்கும்.
 குவிஇணர்த் தோன்றி ஒண்பூ அன்ன
தொகுசெந் நெற்றிக் கணங்கொள்
மதுரைக் கண்ணனார்:குறுந்தொகை: 107:1-2
 24.   காயாம்
காயாம் கார்ப்பருவத்தில் மயிலின் கழுத்தைப்போல் பொலிவுடன் விளங்கும்; முதுவேனில் காலத்தில் வெப்பத்தால் வாடும்.
 ‘புல்லென்காயாப்  பூக்கெழுபெருஞ்சினை
மென்மயில்எருத்தில்தோன்றும்
ஔவையார்: குறுந்தொகை: 183:5-6
(எருத்து-கழுத்து)
25. குரவம்
குரவம் வேனிற்காலத்தில் பூக்கும் ; பல பூக்களாய் மலரும்
 ‘பல்வீபட்டபசுநனைக் குரவம்
மிளைகிழார் நல்வேட்டனார்: குறுந்தொகை: 341:1
 26. குவளை
அகலமும் ஆழமும் உள்ள சுனைகளில் குவளை மலரும்
 ‘அகல்வாய்குண்டுசுனைக்
குவளை
 மோசிகீரனார்: குறுந்தொகை: 59:2-3
 குவளையின்தாள்குறுகியது.
                                                             குவளைக்
 குறுந்தாள்

 பாண்டியன் பன்னாடுதந்தான்: குறுந்தொகை: 270:6-7
 பெண்களின் அழகிய கண்கள் போன்று குவளைமலர் இருக்கும்.
 ‘குவளை அம்கண்
கபிலர்: குறுந்தொகை:13:5
 குவளையின் இதழ்கள் மணம் மிக்கது.
 ‘நாறிதழ்க்குவளை
சிறைக்குடி ஆந்தையார்: குறுந்தொகை:62:2
 குவளையின் பூவிதழ் கரியநிறமாய் இருக்கும்.
 ‘மாயிதழ்க்குவளை
பேயார்: குறுந்தொகை: 339:6
 27. குறிஞ்சி
குறிஞ்சியின் கொம்பு கரியநிறத்தில் இருக்கும்.

கருங்கோல்குறிஞ்சிப் பூ
தேவகுலத்தார்: குறுந்தொகை:3:3
 28. குளவி
காட்டுமல்லிகை மிகுந்த மணம் உடையது.
 ‘குளவிநாறும்
மோசிகீரனார்: குறுந்தொகை: 59:3
  29.கூதாளம்
கூதளங்கொடியின்தாள்குறுகியதாய்இருக்கும்.
 ‘குறுந்தாள் கூதள்
பரணர்: குறுந்தொகை: 60:1
 வெண் கூதாளத்துமலர்கள் உள்துளை யுடையன.
‘வெண்கூதாளத்து அம்தூம்பு புதுமலர்
நாகம்போத்தனார்: குறுந்தொகை: 282:6

30. கொன்றை
கொன்றைப் பூங்கொத்துகள் பொன்நிறத்தில் இருக்கும்.(எனவே, கொன்றைமரத்தின் தழையிடையே நீண்ட பூங்கொத்துகள் தெரிவது, பெண்கள் கூந்தல் இடையிடையே பொன் அணிகலன்களைச் சூடியதுபோல் இருக்கும்.)
 ‘பொன்செய்புனையிழைகட்டியமகளிர்
கதுப்பில்தோன்றும்புதுப் பூங்கொன்றை
ஓதலாந்தையார்: குறுந்தொகை: 21:2-3
 கொன்றை மரத்தின் அடிமரம் பருத்து இருக்கும்.
‘தடவுநிலைக்கொன்றை
கோவத்தனார்: குறுந்தொகை: 66:1
 கொன்றைப்பூ தவளையின் வாய்போன்று உள்ள,(சதங்கை யிலுள்ள) பொற்காசுபோல இருக்கும்.
 ‘தவளைவாயபொலஞ்செய்கிண்கிணிக்
காசினன்ன  போதீன் கொன்றை
இளங்கீரந்தையார்: குறுந்தொகை: 148:2-3
(கிண்கிணி-சதங்கை)
கார்காலத்தில் கொன்றைப்பூக்கள் பசுமையாக விளங்கும்.
 ‘கொன்றைஅம் பசும் வீ  
ஔவையார்: குறுந்தொகை: 183:1
 கொன்றையின் பூக்கள் பொலிவுமிகுந்து இருக்கும்.
‘கொன்றைஒள் வீ
பேயனார்: குறுந்தொகை:233:2
 31. கோங்கு
கோங்கு மலரும் பருவத்தில் இலைகள் முழுமையும் உதிர்ந்துஇருக்கும். அரும்புகள் மார்நுனிபோன்று அழகாய்  மெல்லியனவாய்  இருக்கும்.
 ‘இலையில்அம்சினைஇனவண்டார்ப்ப
முலையேர்மென்முகைஅவிழ்ந்த கோங்கு
பார்காப்பார்: குறுந்தொகை: 254:1-2
 32. சந்தனம்
சந்தனம் மணம் மிக்கது
 ‘நறையகில்
பேயார்: குறுந்தொகை: 339:1
  33. சேம்பு
சேம்பின் இலை யானையின் செவிபோல் பெரியதாய் இருக்கும்.
 ‘சேம்பின்அலங்கல்வள்ளிலை
பெருங்களிற்றுச்செவியின்மான
கிள்ளிமங்கலங்கிழார்: குறுந்தொகை: 76:3-4
 34. ஞாழல்
ஞாழலினது பூக்கள் வெண்சிறுகடுகைப்போன்று சிறியனவாய் இருக்கும்.
 ‘ஐயவிஅன்னசிறுவீ ஞாழல்
குன்றியனார்: குறுந்தொகை: 50:1
ஞாழல்பசுமையானஅரும்புகளையும்பலகொம்புகளையும்உடையது.
 ‘பசுநனைஞாழல் பல்சினை
வடமவண்ணக்கனார்: குறுந்தொகை: 81:2
 ஞாழலின் பூக்கள் சிறியனவாய் இருக்கும்.
சிறுவீ ஞாழல்
பரணர்:குறுந்தொகை:328:1
 ஞாழல் பூக்கள் நறுமணம்மிக்கதாய் இருக்கும்
 ‘நறுவீ ஞாழல்
அம்மூவனார்: குறுந்தொகை: 318:2
 அரும்புகள்முதிர்ந்தஞாழலின்  முட்டைபோன்றுதிரண்டுஇருக்கும்.
 ‘நனைமுதிர் ஞாழல் சினைமருள் திரள்வீ  ’
அம்மூவனார்: குறுந்தொகை: 397:1
 35. ஞெமை
உயரப் பறக்கும் பருந்துகள் அமரும்வகையில் ஞெமை மரம் உயரமாக இருக்கும்..
         ஞெமைத்தலை
ஊனசைஇ ஒருபருந்து இருக்கும்
 தேவனார்: குறுந்தொகை: 285:6
 36. தடாமரம்
தடாமரத்தின் கிளைகள் உயர்ந்து இருக்கும்.
 ‘தடவின்ஓங்கு சினை
 மதுரைமருதனிளநாகனார்:  குறுந்தொகை 160:3
 37. தாமரை
தாமரைமலர்பலஇதழ்களைஉடையது.
 ‘பல்லிதழ்
நரிவெரூஉத்தலையார்:குறுந்தொகை:5:5
 ஆழமான நீர்நிலையில் தோன்றும் தாமரைமலரின்  தாது சிறப்பானது
‘குண்டுநீர்த்தாமரைக்கொங்கு
சிறைக்குடிஆந்தையார்: குறுந்தொகை: 300:3
 38. தாழம்பூ
தாழம்பூவின் மடலுக்கு ஈர்வாள்(இரம்பம்) போன்ற விளிம்பு இருக்கும்.
 ‘வாள்போல் வாயகொடுமடல் தாழை
மாலைமாறனார்: குறுந்தொகை: 245:3
 39. தாழை(கைதை)
தாழையின் பூ வௌ்ளையாய் இருக்கும்
 ‘வௌ்வீத் தாழை
அம்மூவனார்: குறுந்தொகை: 163:4
(வீ- பூ)
 ‘தாழைவெண் பூ
மதுரை எழுத்தாளனார் சேந்தம் பூதனார்: குறுந்தொகை:226:5
 தாழையின் இலை முள்ளுடையது.
‘ முள்ளிலைத்
தடவுநிலைத் தாழை
வெள்ளூர்கிழார் மகனார் வெண்பூதியார்: குறுந்தொகை: 219 :5-6
 தாழைக்கு விழுதுகள் உண்டு; தாழையின் அரும்பு மடல் அவிழ்ந்து விரிந்து மலருவது, அன்னம் தன் சிறகைக் கோதுமிடத்து விரிகின்ற இறகுகள்போல இருக்கும்.
 ‘வீழ்தாழ் தாழை ஊழுறு கொழுமுகை
 குருகுஉளர் இறகின் விரிபுதோடு அவிழும்  
செய்தி வள்ளுவர் பெருஞ்சாத்தனார்: குறுந்தொகை: 228:1-2
(வீழ்-விழுது; ஊழுறு-மலர்கள்விரிகின்ற; குருகு-அன்னம்; உளர்தல்-அலகாலேசிறகினைக்கோதுதல்)
குளிர்ந்த நீர்நிலைகளில்/கரையோரங்களில், கைதை(தாழை) வளரும்.
 ‘கடைகரைத்தாழை
அம்மூவனார்: குறுந்தொகை: 303:2
 ‘கைதைஅம் தண்புனல்
கணக்காயர்தத்தனார்:  குறுந்தொகை: 304:7
‘தாழைதைஇயதயங்குதிரைக்கொடுங் கழி
அண்டர்மகன்குறுவழி : குறுந்தொகை : 345:5
 40. தாளியறுகு
தாளிப்புல்லின் கொடி குளிர்ச்சியாய் இருக்கும்; இதனைப் பசுக்கள் உண்ணும்.
 ‘தாளித் தண்பவர் நாள் ஆமேயும்
காவன்முல்லைப்பூதனார்: குறுந்தொகை :104:3


(தொடரும்)