exnoranirmal02
 
  செவ்வை நேர்த்தி அமைப்பின் மூலம் சுற்றுப்புறத் தூய்மைக்குத் தொண்டாற்றி உலகப்புகழ் பெற்றுள்ள எக்சுநோரா நிர்மல் அவர்களுக்கு வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 2014 தமிழ் விழாவில் பாராட்டினர்.

தமிழ் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை வெளிக்கொணர்ந்து தமிழ் ஈழ விடுதலைக்கான கருத்தாக்கத்தைப் பல தரப்பாரிடமும் ஏற்படுத்தி வரும்  அவரது தொண்டினை விழாவில் பாராட்டினர்.

பேரவையின் முன்னாள் தலைவரும் 2008 பேரவைத் தமிழ்விழா ஒருங்கிணைப்பாளரருமான முனைவர் தனிக்குமார் சேரன் பாராட்டுப் பட்டயம் வழங்கினார்.  வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கச் செயலாளர் முனைவர் விசயகுமார் முத்துசாமி.பொன்னாடை  அணிவித்து வாழத்தினார்.

சமயங்களுக்கு எதிரான அழிவு நோக்கில் இனப்படுகொலையை உலக அமைப்புகளிடம் விளக்கித் தொண்டாற்றும் தூய்மைத் தொண்டர் எம்.பி.நிர்மல் அவர்களை 'அகரமுதல' இதழும் வாழ்த்துகிறது!

exnoranirmal01