ervadi rathakrittinan01
 கவிதை உறவு இலக்கியப் பரிசுகள் பெற ஏப்பிரல் 10-ஆம் நாளுக்குள் புத்தகங்களை அனுப்பவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிப்பிரிவுகள் பரிசுகள் விவரம் வருமாறு:-
 மரபுக் கவிதை  :  துரைசாமி(நாடார்) -இராசாம்மாள் நினைவுப் பரிசு
புதுக்கவிதை : ஊர்வசி செல்வராசு நினைவுப் பரிசு
மனிதநேயம்-வாழ்வியல் : சுப்பையா – தங்கம்மாள் நினைவுப் பரிசு
சிறுகதை : சு. சமுத்திரம் நினைவுப் பரிசு
இலக்கிய கட்டுரைகள் :  முனைவர் மு. வரதராசனார் நினைவுப் பரிசு
ஆய்வு- பொதுக் கட்டுரைகள் :  முனைவர் சி. இலக்குவனார் நினைவுப் பரிசு
மேலும் குறும்படங்கள், குறும்புதினம் அல்லது  புதினம், கல்வியியல் இளைஞர் நலம் ஆளுமை மேம்பாடு, ஊடகவியல் அல்லது திரைப்படத்துறை ஆகிய பிரிவுகளிலும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு பிரிவிலும்
முதல் பரிசாக ரூ. 5000,
இரண்டாம் பரிசாக ரூ. 3000,
3-ஆம் பரிசாக ரூ. 2000 வழங்கப்படும்.
2013-ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்கள், குறும்படங்களுக்கு மட்டுமே பரிசுகள் வழங்கப்படும். ஒவ்வொரு தலைப்பிலும் 4 படிகள் அனுப்பவேண்டும்.
நூல்களை ஏப்பிரல் 10-ஆம்  நாளுக்குள் அனுப்பவேண்டும்.
அனுப்பவேண்டிய முகவரி:
ஏர்வாடி எசு.  இராதாகிருட்டிணன்,
420இ, மலர் குடியிருப்பு,
அண்ணா நகர் மேற்கு, சென்னை – 40.
தரவு : பொறி இ.திருவேலன்