புதன், 14 ஆகஸ்ட், 2013

காற்றிலிருந்து நீர் உற்பத்தி : மதுரையில் அறிமுகம்

நிலத்தடி நீர்மட்டம் குறைவு: காற்றிலிருந்து நீர் உற்பத்தி : முதன் முறையாக மதுரையில் அறிமுகம்



http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_78054120130814013532.jpg


மதுரை:மதுரையில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், காற்றிலிருந்து நீர் உற்பத்தி செய்து, குடிநீர் வழங்கும் திட்டத்தை, முதன் முறையாக மாநகராட்சி அறிமுகம் செய்ய உள்ளது.

மழை குறைவு, மரங்கள் அழிப்பு போன்றவற்றால், மதுரையின் நிலத்தடி நீர்மட்டம், நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. வைகை அணையிலிருந்து கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே, மாநகராட்சி நம்பியுள்ளது. போர்வெல்களில் தண்ணீர் இல்லாததால், வார்டுகளில், பொது குடிநீர் தொட்டிகள் நிறுவ முடியவில்லை. இதனால், மதுரை நீர் ஆதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில், காற்றிலிருந்து நீர் உற்பத்தி செய்யும் முறையை, நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் வறண்ட எல்லை பகுதிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தை, தமிழகத்தில் முதன் முறையாக, மதுரையில் நடைமுறைப்படுத்த உள்ளனர். காற்றிலிருந்து நீரை பிரிக்கும் திறன் கொண்ட "வாட்டர் மேக்கர்' இயந்திரம் மூலம், அதற்கான பரிசீலனை நடக்க உள்ளது. குழாய் இணைப்பு, நீர் ஆதாரங்கள் எதுவும் இன்றி, "திரவமாக்குதல், சேகரித்தல், வடிகட்டுதல் மற்றும் வழங்குதல்,' பணிகளை, அந்த இயந்திரம் செய்து முடிக்கும். அதிக ஈரப்பதத்துடன் கூடிய வெப்பமான பகுதிகளில், "வாட்டர் மேக்கர்' இயந்திரத்தின் செயல்பாடு, அபரிதமாக இருக்கும். சராசரி வெப்பநிலை, 25 டிகிரி செல்ஷியல் முதல், 32 டிகிரி செல்ஷியசிலும், ஈரப்பதம் 70 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை இருக்கும் நிலையில், திறனுக்கேற்ற நீரை உற்பத்தி செய்யும்.

வெப்பநிலையை, 8 முதல், 13 டிகிரி செல்ஷியஸ் வரை பராமரிக்கும். 120ல் துவங்கி, 5,000 லிட்டர் வரை, நாள் ஒன்றுக்கு குடிநீர் உற்பத்தி செய்யும் அளவிற்கு இயந்திரங்கள் உள்ளன. மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸி., அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் கரீபியத் தீவுகளில் மட்டுமே, "வாட்டர் மேக்கர்' இயந்திரம் மூலம், குடிநீர் உற்பத்தி நடக்கிறது. இந்தியாவில், மணிப்பூர் மற்றும் அருணாச்சலில் உள்ள நேஷனல் ரூரல் ஹெல்த் மிஷன், குஜராத், கோல்கட்டா, திரிபுரா எல்லை பாதுகாப்பு படை, மணிப்பூர் துணை கமிஷனர் அலுவலகம், நாகலாந்து மருத்துவமனை கழகம் போன்ற இடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள "வாட்டர் மேக்கர்' முறை, மதுரை மாநகராட்சியில் நடைமுறைக்கு வருகிறது.

மேயர் ராஜன் செல்லப்பா கூறியதாவது: மதுரையில், குடிநீர் பற்றாக்குறையான பகுதிகளில், காற்றின் ஈரப்பதத்திலிருந்து, குடிநீர் உற்பத்தி செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. முதலில், குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் நிறுவப்படும். அதன் பலனைப் பொறுத்து, அனைத்து பகுதிகளிலும் "வாட்டர் மேக்கர்' முறையில், குடிநீர் வினியோகம் செய்யப்படும், என்றார்.

கிரஸ்ட் ஆக்வா டெக் உரிமையாளர் கிரி பிரசாத் கூறுகையில், ""காற்றிலிருந்து நீர் உற்பத்தி குறித்து மேயர், கமிஷனர் விளக்கங்களை கேட்டுள்ளனர். மதுரைக்கு பின், நெல்லை உள்ளிட்ட, நிலத்தடி நீர்மட்டம் குறைவான பகுதிகள் "வாட்டர் மேக்கர்' இயந்திரத்தை பொருத்த, விருப்பம் தெரிவித்துள்ளனர்,'' என்றார்

மாநிலங்களவை தி.மு.க., தலைவராகக் கனிமொழி

மாநிலங்களவை  தி.மு.க., தலைவராகக் கனிமொழியை நியமிக்க ப் பரிந்துரை
 http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_780513.jpg
மாநிலங்களவை தி.மு.க., தலைவர் பதவிக்கு, தி.மு.க., கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாநில செயலர் கனிமொழியை பரிந்துரை செய்வதாக, ராஜ்யசபா தலைவர் அமீது அன்சாரிக்கு, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன், கடிதம் எழுதியுள்ளார்.

ஜூன் மாதம், ராஜ்யசபா தேர்தல் நடந்தது. அ.தி.மு.க., சார்பில், மைத்ரேயன் உட்பட, நான்கு எம்.பி.,க்களும், தி.மு.க., சார்பில் கனிமொழியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், அக்கட்சியின் தேசிய செயலர், டி.ராஜாவும் பதவி ஏற்றனர்.பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத் தொடர் துவங்கியதும், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் பதவி ஏற்றனர். ஆனால், அவர்களுடன் சேர்ந்து, கனிமொழி பதவி ஏற்காமல், தனியாக பதவி ஏற்றார்; தமிழில் உறுதி மொழி ஏற்றுக் கொண்டார்.
ராஜ்யசபாவில், தமிழகத்திலிருந்து தற்போது, 19 எம்.பி.,க்கள் உள்ளனர். அ.தி.மு.க.,வில் மைத்ரேயன், பாலகங்கா, ரபி பெர்னாண்ட், மனோஜ் பாண்டியன், லட்சுமணன், ரத்தினவேல், அர்ஜுனன்; தி.மு.க., சார்பில் கனிமொழி, ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, கே.பி.ராமலிங்கம், செல்வகணபதி, தங்கவேலு இடம் பெற்றுள்ளனர்.காங்கிரஸ் சார்பில், மத்திய அமைச்சர்கள் ஜெயந்தி நடராஜன், வாசன், சுதர்சன நாச்சியப்பன் மற்றும் மணிசங்கர் அய்யர்; இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா; மார்க்சிஸ்ட் சார்பில் டி.கே.ரங்கராஜனும் இடம் பெற்றுள்ளனர்.ராஜ்யசபா தி.மு.க., தலைவராக, திருச்சி சிவா பணியாற்றி வந்தார். அவரது பதவி, ஜூன் மாதம் காலியானதால், அப்பதவி காலியாக இருந்தது. தற்போது, தி.மு.க.,வில் உள்ள, எம்.பி.,க்களில், சீனியர் என்ற அடிப்படையில், கனிமொழிக்கு ராஜ்யசபா தி.மு.க., தலைவர் பதவி வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து, ராஜ்யசபா தலைவர் அமீது அன்சாரிக்கு, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் எழுதிய கடிதத்தில், "ராஜ்யசபா தி.மு.க., தலைவர் பதவியில் இருந்த, சிவாவின் எம்.பி., பதவி காலம் முடிவடைந்து விட்டதால், அவரு பதிலாக கனிமொழியை நியமிக்க தி.மு.க., சார்பில் பரிந்துரை செய்யப்படுகிறது' எனக் குறிப்பிட்டுள்ளார்.இக்கடிதம் அறிவாலயத்திலிருந்து, டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


- தினமலர் செய்தியாளர் -

எருமை விலை உரூ.25 இலட்சம்

உரூ.25 இலட்சத்திற்கு விலை போன  "மிகுவிலை' எருமை : 1 நாளைக்கு 32 புதுப்படி  பால் கறக்குமாம்

 http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_78054220130814014033.jpg
சண்டிகர்:அரியானாவில், தினமும், 32 லிட்டர் பால் கறக்கும் எருமையை, ஆந்திராவை சேர்ந்த விவசாயி, 25 லட்சம் ரூபாய் விலை கொடுத்து வாங்கியுள்ளார். வாங்கிய விலையை விட, 10 மடங்கு அதிகம் விலை போனதில், எருமையை விற்றவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

அரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் உள்ள, சிங்வா காஸ் கிராம விவசாயி, கபூர் சிங். இவர், விவசாயம் செய்வதோடு, சில எருமை மாடுகளையும் வளர்த்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஒரு நாளைக்கு, 32 லிட்டர் பால் கறக்கக்கூடிய, லட்சுமி என்ற எருமையை, 2.5 லட்சம் ரூபாய் கொடுத்து, விலைக்கு வாங்கினார்.மழை காலத்தில் மட்டுமின்றி, வெயில் காலங்களிலும் கூட, எருமை ஒரே அளவில் பால் கொடுத்ததால், கபூர் மகிழ்ச்சி அடைந்தார். அதை பாசமாக வளர்த்து வந்தார். இவரின் எருமை அதிக லிட்டர் பால் கறப்பதை அறித்த பலரும், அதை விலைக்கு வாங்க முன் வந்தனர். எனினும், கபூர் விற்க மறுத்து விட்டார்.

இதற்கிடையே, ஆந்திராவை சேர்ந்த ராஜீவ் சர்பஞ்ச், 32 லிட்டர் பால் கொடுக்கும் லட்சுமியை வாங்கியே தீர வேண்டும் என, முடிவு செய்தார். கடந்த ஓராண்டு காலமாக, கபூரை தொடர்பு கொண்டு, லட்சுமியை வாங்கிக் கொள்வதாக கூறி வந்தார். எனினும், கபூர் மறுத்துவிட்டார்.

இந்நிலையில், "கபூரின் எருமைக்கு, எந்த விலையும் தரத் தயார்' என, சர்பஞ்ச் கூறினார். இதையடுத்து, கபூர் தன் எருமைக்கு, 25 லட்சம் ரூபாய் விலை நிர்ணயம் செய்தார். சர்பஞ்சும் எந்த பேரமும் செய்யாமல், 25 லட்சம் ரூபாயை கொடுத்து, எருமையை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார்.வாங்கிய விலையை விட, 10 மடங்கு அதிக விலைக்கு, எருமையை விற்றதில், கபூர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். கிடைத்த பணத்தில், தன் மகளின் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.ஆந்திராவில், இந்த ஆண்டு இறுதியில், நடைபெறவுள்ள, மாட்டு கண்காட்சியில், அதிக பால் கறக்கும் பசு, எருமைகளின் உரிமையாளர்களுக்கு, 1 கிலோ தங்கம் பரிசாக வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தான் வாங்கிய லட்சுமியை, இந்த போட்டியில் கலந்து கொள்ள செய்து, 1 கிலோ தங்கத்தை வெல்ல திட்டமிட்டுள்ளார் சர்பஞ்ச்

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

SL military intelligence collects details of TNA candidates in Mannaar

SL military intelligence collects details of TNA candidates in Mannaar

[TamilNet, Monday, 12 August 2013, 23:43 GMT]
The intelligence operatives of the occupying Sri Lankan military in Mannaar have been visiting the houses of candidates of the Tamil National Alliance (TNA) taking part in the provincial elections and ‘registering’ the personal data, their affiliations and details of the family members in an intimidating way, the candidates taking part in the Northern Provincial Council elections say. Some of the ‘visits’ have taken place during the nights.

Two different teams of intelligence operatives have been collecting details, one claiming that they were from ‘State Intelligence Service’ and the other team claiming as the intelligence division of the SL military in Mannaar.

The visiting intelligence squads have been asking the TNA candidates where they studied in the past and their employment history.

The details of family members and their whereabouts have also been registered by the visiting intelligence squads.

A similar round of ‘intelligence harassment’ was reported before the nominations were filed to intimidate possible candidates from coming forward to participate in the elections. A former government agent of Mannaar, two lawyers, a doctor, a councillor and a village officer were intimidated this way before the nominations.

Now, the second round of harassment targets those who have been officially nominated by the TNA.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை வேண்டும்: நார்வே

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்: நார்வே முன்னாள் மந்திரி வலியுறுத்தல்
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்: நார்வே முன்னாள் மந்திரி வலியுறுத்தல்
கொழும்பு, ஆக. 13-

நார்வே நாட்டின் சர்வதேச மேம்பாட்டு துறையின் முன்னாள் மந்திரி எரிக் சோலைம். 2006ம் ஆண்டு இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே சமாதானம் ஏற்பட முயற்சித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது பெரு முயற்சி தோல்வியில் முடிந்ததால் 2009ம் ஆண்டு நடந்த உள்நாட்டு உச்சக்கட்டப் போரில் விடுதலை புலிகள் இயக்கத்தை முற்றாக அழித்தொழித்து விட்டதாக இலங்கை அரசு கொக்கரித்து வருகிறது.

இந்நிலையில், இலங்கையின் இறுதிக்கட்ட போர் காலத்தின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எரிக் சோலைம் தற்போது வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சீன ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், 'இலங்கையின் இறுதிக் கட்ட போரின் போது லட்சக் கணக்கானவர்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். இந்த போர்க் குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடந்தேறி பல ஆண்டுகள் கடந்தும் சர்வதேச சமுதாயம் கண்களை மூடிக்கொண்டு போர் குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கை தப்பித்துக்கொள்ள அனுமதித்து விடக்கூடாது.

இலங்கையில் நம்பகத்துக்குரிய ஜனநாயக முறை நிலவாததால் இதுதொடர்பாக விசாரணை நடத்த சர்வதேச சமுதாயம் முன்வர வேண்டும்.

அடுத்த மாதம் இலங்கை செல்லும் ஐ.நா. மனித உரிமை சபையின் உயர் ஆணையர் நவீண் பிள்ளை, இவ்விவகாரத்தில் இலங்கை அரசுக்கு அழுத்தமான செய்தியை பதிவு செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.

குழாய்த் தண்ணீரில் மின்சாரம் தயாரிக்கலாம்!

குழாய் த்  தண்ணீரில் மின்சாரம் தயாரிக்கலாம்!

குழாயிலிருந்து வரும் தண்ணீரின் விசையைப் பயன்படுத்தி, மின்சாரம் தயாரிக்கும் இன்ஜினியரிங் மாணவி,  செய்சக்தி: நான், ஈரோடு மாவட்டத்தின், பெருந்துறை மகாராஜா மகளிர் பொறியியல் கல்லூரியில், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில், இறுதி ஆண்டு படிக்கிறேன். நாளுக்கு நாள், மின்சாரத்தின் தேவை அதிகரிப்பதால், மின் தேவையை விட, உற்பத்தி குறைவாகவே உள்ளது. இதனால், எளிய வகையில் மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில், நண்பர்களோடு ஈடுபட்டேன். நீர்வீழ்ச்சியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் போது, நாம் ஏன் குழாய்களில் வரும் தண்ணீரின் விசையை பயன்படுத்தி, மின்சாரம் தயாரிக்க முடியாது என்ற சிந்தனையில் உருவானது தான், இந்த கண்டுபிடிப்பு. வீடு மற்றும் தெரு குழாய்கள், விவசாய பம்பு செட்கள் இவற்றை பயன்படுத்தும் போது, அழுத்தம் நிறைந்த தண்ணீர் வெளியேறும். அந்த அழுத்தத்தில் இருந்து சிறிய அளவிலான, "டர்பைன் மற்றும் டைனமோவை' இயக்கி, மின்சாரத்தை உற்பத்தி செய்தோம். உற்பத்தியான மின்சாரத்தை, "பேட்டரி'யில் சேமித்து, இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரிய பயன்படுத்தினோம்.
இதில், "சென்சார்' பொருத்தப்பட்டுள்ளதால், தேவையற்ற நேரங்களில் மின்விளக்குகள் ஒளிர்வதை தடுத்து, மின்சாரத்தை சேமிக்கலாம். குழாயை பயன்படுத்தும் போதெல்லாம், தண்ணீரின் அழுத்தம் காரணமாக, நாங்கள் கண்டுபிடித்த சாதனம், மின்சாரத்தை உற்பத்தி செய்யும். கல்லூரி புராஜெக்ட்டுக்காக சிறிய வடிவில் தயாரித்தாலும், இதன் மூலம் தினமும், 3 முதல், 4 வோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். 900 ரூபாயில் தயாரிக்கப்பட்ட இச்சாதனத்திற்கு, "அக்குவா பிரைட்' என, பெயரிட்டுள்ளோம். இதன் காப்புரிமைக்காக, சென்னையில் உள்ள இந்திய காப்புரிமை கழகத்தில், விண்ணப்பித்து உள்ளோம். டில்லியில் உள்ள, "இந்திய அறிவியல் கழகம்' நடத்திய புதிய கண்டுபிடிப்பிற்கான போட்டியின் முதல் சுற்றில், அக்குவா பிரைட் சாதனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது, எங்கள் புராஜெக்ட்டுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.

Mannaar district Sinhalicised

Border division of Mannaar district Sinhalicised

[TamilNet, Monday, 12 August 2013, 19:35 GMT]
After Sinhalicising a border division in the Mullaiththeevu district of the Northern Province as ‘Weli-Oya’ on the eastern coast, genocidal Sri Lanka is now engaged in the Sinhalicisation of a border division, Musali, in the Mannaar district of the Northern Province on the western coast, news sources in Mannaar said. Both the Sinhala colonisations take place as demographic projections from the Anuradhapura district of the North Central Province. Around 400 acres of forest has been cleared for settling 1300 Sinhala families at the Ko’ndaichchi coast of Mannaar district. The families, who have nothing to do with the district are not only brought down hurriedly and settled as ‘re-settlers’, but also are advised to register as voters before the NPC elections.

New Delhi and Washington talking about the NPC elections without recognising and guaranteeing the territoriality and demography of Eezham Tamils, amounts to nothing but blatant complicity in the demographic genocide as continuity of their complicity in the genocidal war, commented Tamil activists for alternative politics in the island.

The divisional secretary of Musali, Mr. Ketheesvaran, who was protesting to the ‘resettlement’ hoax and registration of the colonisers as voters, was served with a transfer order, news sources in Mannaar said.

Even the earlier divisional secretary Mr. Raveendran was transferred as he had objections to the colonisation in the name of ‘special resettlement’.

The Sinhala Government Agent of Mannaar, Mr Y.S. Desapriya denied the accusations.

This is a normal ‘resettlement’ he claimed, denying the transfer order to the divisional secretary and the reports that the Sinhala colonisers were brought by buses from Anuradhapura.

The SL Government Agent was newly posted after his predecessor had been removed for not adequately cooperating with Colombo in the Sinhala colonisation programmes.

Sources associated with mosques and churches in the region confirmed the arrival of Sinhala colonisers from Anuradhapura district.

According to news sources, under the SL government project called ‘special resettlement programme’ the Sinhala colonisers were brought from Maavilaachchi and Nochchiyaa-gama parts of the Anuradhapura district to Ko’ndaichchi and Kokkup-padaiyaan coast of the Mannaar district.

Around a 4 Sq.km settlement has been created for them. The Sinhala families are provided with half an acre of land to each and are promised of permanent houses for them soon.

The families were neither affected by the war nor were displaced people. Hence they could not be treated as ‘re-settlers’ and could not be permitted, was the stand of the divisional secretary.

The Musali divisional secretary has also pointed out that the colonisers for whom voter registration in the division is demanded are still registered voters in Anuradhapura district and their registration there has not been cancelled, which is a prerequisite for new registrations.

While on one hand the so-called ‘international aided’ resettlement of war-affected people is abused for demographic genocide by such colonisations, on the other hand, a fraud is committed by bringing in outside voters to the NPC elections for which the 2012 registration is the basis, observers in the Northern Province commented.

The area selected for the Sinhala colonisation is the coast of a fertile bay, which was once the centre for pearl diving traditionally conducted since time immemorial by Eezham Tamil coastal folk called Paravar and Mukkuvar.

Meanwhile, 2500 Tamil-speaking Muslim families who were displaced during the war have also now returned to Musali as 6000 families.

They also complain that the 5-acre per family settlement plan of theirs is also misused for Sinhala colonisation.

While SL minister Risard Badurdeen appropriates Tamil lands for the colonisation of Tamil-speaking Muslims, his government is engaged in colonising Sinhalese brought from Anuradhapura, observers in the district said.

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

இரைப்பைப் புற்றுநோய்க்குத் தீர்வு!

இரைப்பை ப் புற்றுநோய்க்கு  த் தீர்வு!

உலக அளவில் முதல் முறையாக, இரைப்பை புற்றுநோய்க்கு காரணமான மரபணுவை கண்டுபிடித்துள்ள, எம்.எசு. சந்திரமோகன்: நான், சென்னை அரசு பொது மருத்துவமனையில், குடல் மற்றும் இரைப்பை துறை, தலைமை மருத்துவராக பணியாற்றுகிறேன். உலக அளவில், இரைப்பை புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டு இறப்பது, இந்தியர்களே. குறிப்பாக, தமிழகத்தில் தான், இதன் பாதிப்பு அதிகம். உணவில், உப்பின் அளவு அதிகம் இருப்பது; இறைச்சியை உப்பு கண்டம் போட்டு, நீண்ட நாட்களுக்கு சாப்பிடுவது; பதப்படுத்தப்பட்ட உணவை பொரிப்பதற்கு, ஒரே எண்ணெயை திரும்ப திரும்ப பயன்படுத்துவது; கருவாடு, ஊறுகாய் போன்றவற்றை அதிக அளவு சாப்பிடுவது. மது மற்றும் புகை பழக்கத்திற்கு அடிமையாவது ஆகியவற்றால், இரைப்பை புற்றுநோய் வருகிறது. பசியின்மை, தொடர்ந்து எடை குறைவு, ரத்த சோகை, உணவை விழுங்குவதில் சிரமம், கேன்சர் கட்டியிலிருந்து ரத்தம் கசிவதால் கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல் என, பல சிரமம் இதனால் ஏற்படுகிறது. "இன்டர்நேஷனல் கேஸ்ட்ரிக் கேன்சர்' அமைப்பு, இரைப்பை புற்றுநோய்க்கான சர்வதேச கருத்தரங்கை நடத்துகிறது. சமீபத்தில், இத்தாலியில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்க, இந்தியாவிலிருந்து நான் மட்டுமே சென்றிருந்தேன். அங்கு, நான் கண்டறிந்த இரைப்பை புற்றுநோய்க்கு காரணமான, மூன்று மரபணுக்கள் பற்றிய ஆய்வறிக்கையை சமர்ப்பித்தேன். இரைப்பை புற்றுநோய் பாதித்த கட்டிகளை பரிசோதித்ததில், நான் கூறிய மூன்று மரபணுக்களும் அதில் இருந்தன. இந்தியாவில், மரபியல் ரீதியிலான இரைப்பை புற்றுநோய் பாதிப்பு தான் அதிகம். அப்படிப்பட்ட அபாயத்தில் இருப்பவர்களின், வயிற்று பகுதியில் உள்ள சதையை பரிசோதிக்க வேண்டும். மேற்கூறிய மரபணுக்கள், வயிற்று சதையில் இருப்பதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், தேவையான முன்னெச்சரிக்கை சிகிச்சை செய்ய முடியும். எதிர்காலத்தில், மரபணு சிகிச்சையை, நாமே செய்ய முடியும் என்ற நம்பிக்கையை, இந்த மரபணு கண்டுபிடிப்பு ஏற்படுத்தியுள்ளது.

மலையாள ஆட்டத்தில் இருந்து பாதுகாக்க ஆணையம் தேவை.


தினஇதழ் Home / சிறப்பு பகுதிகள் / பக்கத்து வீட்டு பெண் என்னை ‘பட்டி’ என்று திட்டுவார்
பக்கத்து வீட்டு பெண் என்னை ‘பட்டி’ என்று திட்டுவார்

பக்கத்து வீட்டு ப் பெண் என்னை ப் ‘பட்டி’ என்று திட்டுவார்

சென்னை, ஆக. 10
மலையாளி லாபிகளிடமிருந்து தமிழக மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறினார்.இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், பக்கத்து வீட்டு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். தன் மீதான குற்றச்சாட்டு குறித்து ஜேம்ஸ் வசந்தன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:‘‘ராதா வேணு பிரசாத், தற்போது நாங்கள் இருக்கும் வீட்டின் இடத்தை கடந்த 2 வருடங்களுக்கு முன்பு விலைக்கு கேட்டார். எங்களுடைய கனவு வீடான அதை விற்க மாட்டோம் என கூறினோம். அதையடுத்து அவர் பல்வேறு வகையில் எங்களை மிரட்டி வந்தார். அவர் அடிக்கடி அத்துமீறி தகாத வார்த்தையில் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதனை தொடர்ந்து கடந்த 2011ம் ஆண்டு, அவர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்.
ஆனால் காவல்துறை முதல் தகவல் அறிக்கையை கூட அவர் மீது பதிவு செய்ய வில்லை. ஒய்வு பெற்ற மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி அவருக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டு வருகிறார். கடந்த ஆகஸ்டு 4ம் தேதி எங்களது வீட்டிற்கு வந்த நீலாங்கரை காவல்துறை ஆய்வாளர் புகழேந்தி, காவல்துறை உதவி ஆணையர் அழைத்து வரச் சொன்னார் என கூறி காவல் நிலையங்களுக்கு, செல்லாமல் தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக உணர்ந்த என் மனைவியும் நானும் அங்கிருந்து புறப்பட முற்பட்ட போது நான் கைது செய்யப்பட்டேன். இதற்கிடையே என்னை பார்க்கும் போதெல்லாம், ‘பட்டி’ (நாய்)என்று அழைப்பார். எனவே இது போன்ற மலையாளி லாபிகளிடமிருந்து அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். இவ்வாறு ஜேம்ஸ் வசந்தன் நிருபர்களிடம் கூறினார்

திருத்தவே முடியாத சிங்களத் தீவிரவாதி இராசபக்சே - சிங்கப்பூரின் லீ குவான் யூ



திருத்தவே முடியாத சிங்களத் தீவிரவாதி இராசபக்சே - சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ பரபரப்பு பேட்டி.
 
இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது என்று சிங்கப்பூரின் முதல் பிரதமரும், சிங்கப்பூரின் நவீன சிற்பியும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ பரபரப்பாக கூறியுள்ளார். 

லீ குவான் யூ உடனான உரையாடல்கள் என்ற தலைப்பில் லாஸ் ஏஞ்சலெஸை சேர்ந்த பேராசிரியர் டாம் பிளேட், லீயிடம் பேட்டி கண்டு நூல் ஒன்றை எழுதியுள்ளார். அந்த நூலில்தான் ராஜபக்சே குறித்து லீ குவான் யூ இவ்வாறு கூறியுள்ளார். 

இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- 

இலங்கையில் சிங்களர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர். தமிழர்களும், சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது. 

இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்டுவிட்டனர். இதன் மூலம் இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறி வருகிறார். இதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். 

ஆனால், தமிழர்கள் அடங்கிக் கிடக்க மாட்டார்கள். சிங்களர்களுக்குப் பயந்து ஓடி விடவும் மாட்டார்கள். இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பேச்சுக்களை நான் படித்திருக்கிறேன். அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்றவோ, அவரைத் திருத்தவோ முடியாது என்று கூறியுள்ளார் லீ. 

இலங்கை இன்று மகிழ்ச்சியுடன் இல்லை. பெரும்பான்மையான சிங்களவர்கள், விடுதலைப்புலிகளை அழித்து விட்டனர். உண்மைதான். ஆனால், சிறுபான்மையினரான தமிழர்களை வெல்லும் தகுதியும், துணிச்சலும் அவர்களுக்கு நிச்சயம் இல்லை. யாழ்ப்பாணம் தமிழர்களை அவர்களால் நிச்சயம் வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை நசுக்கி, ஒடுக்க முயலுகிறார்கள். 

முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இதுதான் ஆயுதப் போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முயல்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அழித்த விட முடியும் என்ற அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது என்று நான் கருதுகிறேன். 

இலங்கையில் இன்று நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான ஒரு இன அழிப்பு என்பதில் சந்தேகமே இல்லை. தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். அதற்கேற்பத்தான் சிங்கள அரசு இப்போது நடந்துகொண்டிருக்கிறது. 

என்னைப் பொறுத்தவரை, சிங்களவர்களை விட தமிழர்களுக்குத்தான் அதிக மரியாதை தரப்பட வேண்டும். அதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் தமிழர்கள்தான். மலேசியா, சிங்கப்பூரில் போய்ப் பார்த்தால் மலாய் இனத்தவரை விட சீனர்களும், தமிழர்கள் உள்ளிட்டோரும்தான் கடுமையாக உழைக்கிறார்கள். 

அதேபோல இஸ்ரேலியர்களும், ஜப்பானியர்களும் மிகக் கடுமையான உழைப்பாளிகள். எதிர்கால உலகம் சீனர்கள் மற்றும் ஆசியர்களிடம்தான் இருக்கப் போகிறது என்று கூறியுள்ளார் லீ. 

இந்த நூலை முன்னணி பத்திரிகையாளரும், லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்தவருமான பேராசிரியர் டாம் பிளேட், லீயிடம் பேட்டி கண்டு எழுதியுள்ளார். இதை வெளியிட்ட நிறுவனம் டைம்ஸ் குழுமத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

எனக்கு நீ வேண்டாம், தேவையில்லாத சுமை என்று சிங்கப்பூரை மலேசியா தனியாக கழற்றி விட்டது. அப்போது சிங்கப்பூர் மக்கள் நிலை குலைந்து போனார்கள்.

ஆனால், அவர்களைத் தேற்றி, தனது தலைமையில் சிங்கப்பூரை இன்று அட்டகாசமான பொருளாதார சக்தியாக மாற்றிய பெருமைக்குரியவர் லீ குவான் யூ என்பது குறிப்பிடத்தக்கது.
- See more at: http://vannimedia.com/site/news_detail/20769#sthash.s8Q9yfms.dpuf

யாழ் : புத்த விகாரை மீது கை க் குண்டு வீச்சு !

யாழ் நாவற்குழியில் கட்டப்பட்டு வந்த புத்த விகாரை மீது
 கை க் குண்டு வீச்சு !

யாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழியில் , பல சிங்களவர்கள் அத்துமீறிக் குடியேறியுள்ளார்கள். அங்கே இருக்கும் புறம்போக்கு காணிகள் மற்றும் தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளை அவர்கள் வளைத்துப்போட்டுள்ளார்கள். தற்போது இவர்களுக்கு வீடமைத்துக்கொடுக்கவும் அரசு முன்வந்துள்ளது. அங்கே அவர்கள் ஒரு புத்த விகாரையையும் நிர்மாணித்து வருகிறார்கள். இந்த் விகாரை முழுமையாகப் பூர்த்தியாகவில்லை. இந் நிலையில் இன்று இரவு(சனிக்கிழமை) மோட்டர்சைக்கிளில் வந்த இருவர், குறிப்பிட்ட இந்த விகாரை மீது கைக்குண்டு தாக்குதல் ஒன்றை நிகழ்த்திவிட்டு மின்னல் வேகத்தில் தப்பித்துச் சென்றுவிட்டார்கள். இரவு 8.00 மணியளவில் சில சிங்களவர்கள் கூடி புத்த விகாரையில் பிரார்த்தனையில் ஈடுபட்டவேளையே இக் குண்டு எறியப்பட்டுள்ளது.

இதனால் "கொட்டியா" "கொட்டியா" அதாவது புலிகள் புலிகள் என்று கத்திக்கொண்டு பயந்தடித்துச் சிங்களவர்கள் வெளியே ஓடிவந்துள்ளார்கள். அவர்கள் கூடியிருந்த கட்டிடத்திற்கு வெளியே உள்ள சுவரில் கைக்குண்டின் சன்னங்கள் தெறித்த காயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. உடனடியாக பெருமளவான இராணுவத்தினரும் பொலிசாரும் அங்கே வரவளைக்கப்பட்டு, அவ்விடத்தை இராணுவம் சுற்றிவளைத்துள்ளது என்றும் அங்கிருந்து தகவல்கள் கிடைத்துள்ளது. நவற்குழி மற்றும் செம்மணிச் சுடலை, அரியாலை போன்ற பகுதிகளை இலங்கை இராணுவம் சுற்றிவளைத்து தேடுதல் நடத்திவருவதாக பிரதேசவாசிகள் சிலர் வன்னி மீடியா இணையத்துக்கு தெரிவித்துள்ளார்கள்.

இக் குண்டுவெடிப்பு காரணமாக அவ்விடத்தில் உள்ள சில தமிழர்களை சிங்களவர்கள் இராணுவத்துடன் இணைந்து தாக்கியுள்ளதாகவும் ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிகள் செய்திகள் நாளை காலை வெளியாகும். இது தொடர்பான சில வீடியோ மற்றும் புகைப்படங்கள் மிக விரைவில் வெளியாக உள்ளது. எனவே அதுவரை வன்னி மீடியா இணையத்தோடு இணைந்திருங்கள்.

- See more at: http://vannimedia.com/site/news_detail/20657#sthash.Pa3oixfT.dpuf

யாழ் நாவற்குழியில் கட்டப்பட்டு வந்த புத்த விகாரை மீது கைகுண்டு வீச்சு !
12-Aug-2013 அன்று பிரசுரிக்கப்பட்டது
யாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழியில் , பல சிங்களவர்கள் அத்துமீறிக் குடியேறியுள்ளார்கள். அங்கே இருக்கும் புறம்போக்கு காணிகள் மற்றும் தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளை அவர்கள் வளைத்துப்போட்டுள்ளார்கள். தற்போது இவர்களுக்கு வீடமைத்துக்கொடுக்கவும் அரசு முன்வந்துள்ளது. அங்கே அவர்கள் ஒரு புத்த விகாரையையும் நிர்மாணித்து வருகிறார்கள். இந்த் விகாரை முழுமையாகப் பூர்த்தியாகவில்லை. இந் நிலையில் இன்று இரவு(சனிக்கிழமை) மோட்டர்சைக்கிளில் வந்த இருவர், குறிப்பிட்ட இந்த விகாரை மீது கைக்குண்டு தாக்குதல் ஒன்றை நிகழ்த்திவிட்டு மின்னல் வேகத்தில் தப்பித்துச் சென்றுவிட்டார்கள். இரவு 8.00 மணியளவில் சில சிங்களவர்கள் கூடி புத்த விகாரையில் பிரார்த்தனையில் ஈடுபட்டவேளையே இக் குண்டு எறியப்பட்டுள்ளது.
 
இதனால் "கொட்டியா" "கொட்டியா" அதாவது புலிகள் புலிகள் என்று கத்திக்கொண்டு பயந்தடித்துச் சிங்களவர்கள் வெளியே ஓடிவந்துள்ளார்கள். அவர்கள் கூடியிருந்த கட்டிடத்திற்கு வெளியே உள்ள சுவரில் கைக்குண்டின் சன்னங்கள் தெறித்த காயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. உடனடியாக பெருமளவான இராணுவத்தினரும் பொலிசாரும் அங்கே வரவளைக்கப்பட்டு, அவ்விடத்தை இராணுவம் சுற்றிவளைத்துள்ளது என்றும் அங்கிருந்து தகவல்கள் கிடைத்துள்ளது. நவற்குழி மற்றும் செம்மணிச் சுடலை, அரியாலை போன்ற பகுதிகளை இலங்கை இராணுவம் சுற்றிவளைத்து தேடுதல் நடத்திவருவதாக பிரதேசவாசிகள் சிலர் வன்னி மீடியா இணையத்துக்கு தெரிவித்துள்ளார்கள்.
 
இக் குண்டுவெடிப்பு காரணமாக அவ்விடத்தில் உள்ள சில தமிழர்களை சிங்களவர்கள் இராணுவத்துடன் இணைந்து தாக்கியுள்ளதாகவும் ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிகள் செய்திகள் நாளை காலை வெளியாகும். இது தொடர்பான சில வீடியோ மற்றும் புகைப்படங்கள் மிக விரைவில் வெளியாக உள்ளது. எனவே அதுவரை வன்னி மீடியா இணையத்தோடு இணைந்திருங்கள்.
 
- See more at: http://vannimedia.com/site/news_detail/20657#sthash.Pa3oixfT.dpuf
யாழ் நாவற்குழியில் கட்டப்பட்டு வந்த புத்த விகாரை மீது கைகுண்டு வீச்சு !
12-Aug-2013 அன்று பிரசுரிக்கப்பட்டது
யாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழியில் , பல சிங்களவர்கள் அத்துமீறிக் குடியேறியுள்ளார்கள். அங்கே இருக்கும் புறம்போக்கு காணிகள் மற்றும் தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளை அவர்கள் வளைத்துப்போட்டுள்ளார்கள். தற்போது இவர்களுக்கு வீடமைத்துக்கொடுக்கவும் அரசு முன்வந்துள்ளது. அங்கே அவர்கள் ஒரு புத்த விகாரையையும் நிர்மாணித்து வருகிறார்கள். இந்த் விகாரை முழுமையாகப் பூர்த்தியாகவில்லை. இந் நிலையில் இன்று இரவு(சனிக்கிழமை) மோட்டர்சைக்கிளில் வந்த இருவர், குறிப்பிட்ட இந்த விகாரை மீது கைக்குண்டு தாக்குதல் ஒன்றை நிகழ்த்திவிட்டு மின்னல் வேகத்தில் தப்பித்துச் சென்றுவிட்டார்கள். இரவு 8.00 மணியளவில் சில சிங்களவர்கள் கூடி புத்த விகாரையில் பிரார்த்தனையில் ஈடுபட்டவேளையே இக் குண்டு எறியப்பட்டுள்ளது.
 
இதனால் "கொட்டியா" "கொட்டியா" அதாவது புலிகள் புலிகள் என்று கத்திக்கொண்டு பயந்தடித்துச் சிங்களவர்கள் வெளியே ஓடிவந்துள்ளார்கள். அவர்கள் கூடியிருந்த கட்டிடத்திற்கு வெளியே உள்ள சுவரில் கைக்குண்டின் சன்னங்கள் தெறித்த காயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. உடனடியாக பெருமளவான இராணுவத்தினரும் பொலிசாரும் அங்கே வரவளைக்கப்பட்டு, அவ்விடத்தை இராணுவம் சுற்றிவளைத்துள்ளது என்றும் அங்கிருந்து தகவல்கள் கிடைத்துள்ளது. நவற்குழி மற்றும் செம்மணிச் சுடலை, அரியாலை போன்ற பகுதிகளை இலங்கை இராணுவம் சுற்றிவளைத்து தேடுதல் நடத்திவருவதாக பிரதேசவாசிகள் சிலர் வன்னி மீடியா இணையத்துக்கு தெரிவித்துள்ளார்கள்.
 
இக் குண்டுவெடிப்பு காரணமாக அவ்விடத்தில் உள்ள சில தமிழர்களை சிங்களவர்கள் இராணுவத்துடன் இணைந்து தாக்கியுள்ளதாகவும் ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிகள் செய்திகள் நாளை காலை வெளியாகும். இது தொடர்பான சில வீடியோ மற்றும் புகைப்படங்கள் மிக விரைவில் வெளியாக உள்ளது. எனவே அதுவரை வன்னி மீடியா இணையத்தோடு இணைந்திருங்கள்.
 
- See more at: http://vannimedia.com/site/news_detail/20657#sthash.Pa3oixfT.dpuf