ஞாயிறு, 29 டிசம்பர், 2013

அகரமுதல இணைய இதழ் 7 akaramuthala issue 7 தொடர்கள் சிலவும் கவிதை, பாடல்போடடியும்


-    திருக்குறள் பாவலன் தமிழ்மகிழ்நன் 92802 53329     தாயுனைத் தொழுதுன் திருவடி பணிவேன்  தன்னலச் சேற்றினில் மாயேன்! கோயிலில் உறையும் கொற்றவை போலே   குடியினைக் காப்பவள் நீயே! சேயெமைக் காக்க சீரலொ மிழந்தாய்!   செல்வமே பிள்ளைக ளென்றாய்! ஓயுத லின்றி உழைப்பினைத் தந்தாய்!  உனக்கிலை ஒருவரு மீடே!   பற்பல தெய்வம் படைத்தன ரெனினும்  பண்புடை தாய்முதற்  தெய்வம் நற்றவம் செய்தேன் நானுனைத் தாயாய்  நல்லறப் பேற்றினால் பெற்றேன்!   வெற்றுரை யில்லை வெடித்தெழும் ...
(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 6. உதியஞ்சேரலைப் பாடியவர் போல் மகிழ்க! வாழ்க! - தோழி கருத்திற்கினிய காதலனை மணக்க விரும்பினாள் தலைவி.  பெற்றோர்கள் குறுக்கே நின்றனர். தலைவியை அவள் பெற்றோர்கள் அறியாமல் அழைத்துச்சென்று மணந்து கொள்ளுமாறு தலைவனிடம் தோழி முறையிட்டாள். தலைவன் வழியின் கொடுமையைக் கூறிக் காலம் தாழ்த்தான். ஆயினும் தோழியின் வற்புறுத்தலுக்கு இணங்கி அழைத்துக்கொண்டு போவதாக உறுதி ...
(முன் இதழ்த் தொடர்ச்சி) - இலக்குவனார் திருவள்ளுவன் பிடில் சீனிவாசையர், ‘தமிழிசைதான் தென்னிந்தியாவின் இசை. அது சூரியனைப் போன்றது. மற்ற இசைகளுக்கும்மற்ற மொழிகளுக்கும் இடம் கொடுக்கும் பாவம் தமிழிசைக்கு உண்டு. அதனாலேயே தமிழிசை கேடுற்றது. பயிரைக் கெடுக்க வந்த களைகளைப் பிடுங்கி எறிய வேண்டுமா? அவற்றோடு உறவு கொண்டாட வேண்டுமா?” என்று ஆணித்தரமாகக் கேட்டும் பரிதிமாற் கலைஞர் குறிப்பிடும் ...

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) நூன்மரபு 32. , , ஒ அம்மூன்றும் வினா.   , , ஓ என்பன மூன்றும் வினாப்பொருளில் வருங்கால் வினா வெழுத்துகள் எனப் பெயர் பெறும்.   காட்டு : வந்தானா வந்தானே வந்தானோ வந்தானே என்பது வினாப்பொருளில் இப்பொழுது வழக்கில் இன்று.   33. அன்புஇறந்து  உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென  மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்.     உயிர் எழுத்துகள் தமக்குரிய அளபினை (மாத்திரையை)க் கடந்து ...

அசித்தர் பேசி – 93827 19282   (முன் இதழ்த் தொடர்ச்சி) பாதரசம்        -     இதளியம், இதள் பாதாம்           -     கற்பழவிதை பாயசம்           -     பாற்கன்னல் பார்லி           -     பளிச்சரி, வாற்கோதுமை பாரதம்          -     இதளியம், இதள் பாரிசாதம்       -     பவழமல்லிகை பால்கோவா    -     திரட்டுப்பால் பாசாணம்       -     கல், நஞ்சு பிசுதா           ...
பரிசு உருவா 1000.00   பாடல்அனுப்ப வேண்டிய கடைசிநாள் 2014 சனவரி 28 சிறுவர்கள் பாடிமகிழ்தற்கேற்ற இனிய 12 வரிப்பாடல்கள் 5 பாடல்கள் எழுத வேண்டும். முதற்பரிசு 500.00 உருவா இரண்டாம் பரிசு 300.00  உருவா மூன்றாம் பரிசு 200.00 உருவா நெறிமுறைகள் 1.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. 2.பிறமொழிச் சொற்கள் கலவாத தனித்தமிழில் பாடல்கள் அமைய வேண்டும். 3.அறிவியல்,விளையாட்டு,இயற்கை,பகுத்தறிவு,முதலிய பாடுபொருள்களைக் கொண்டு எளிமையாக இருத்தல் வேண்டும். 4.இதுவரை வெளிவராத பாடல்களை மட்டுமே போட்டிக்கு ...

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)   உ. பொருள் செயல்வகை  நாட்டுக்கு அரணும் படையும் இன்றியமையாதன. அவற்றை ஆக்கவும் காக்கவும் பொருள் மிகமிக இன்றியமையாதது. ஆதலின், பொருளைச் செய்தலின் திறம் இங்குக் கூறப்படுகின்றது. பொருள் நாட்டையாள்வோருக்கு மட்டுமன்றி ஆளப்படுவோர்க்கும் இன்றியமையாதது.   1. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்.  (குறள் 751)      பொருள் அல்லவரை - ஒரு பொருளாக மதிக்கப்படும் தகுதி ...

(முன்னிதழ்த் தொடர்ச்சி)   போராளிகள் இனத்தைப் பேரழிவிலிருந்து பாதுகாத்து, எமது தாயக நிலத்தை அயலவனிடமிருந்து மீட்டெடுக்க எமது விடுதலை இயக்கம் அளப்பரிய ஒப்படைப்புகளைச் செய்துள்ளது. எமது மாவீரர்களின் இம்மகத்தான  ஈகங்களால், எத்தனையோ தடவைகள் நாம் பேரழிவுகளின் விளிம்பிலிருந்து மீண்டிருக்கின்றோம். மரணத்தின் வாயிலுக்குச் சென்று மறுபிறவி எடுத்திருக்கின்றோம். வல்லாதிக்க  ஆற்றல்களின் தலையீடுகளைத் தனித்து நின்று தகர்த்திருக்கின்றோம். . . ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக