திங்கள், 11 நவம்பர், 2013

எழுத்தாளர் புட்பா தங்கதுரை மரணம்

மருத்துவமனையில் பண்டுவம் பெற்று வந்த 

எழுத்தாளர் புட்பா தங்கதுரை மரணம்

சென்னை
சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார்.
பிரபல எழுத்தாளர்
சென்னையைச் சேர்ந்த பிரபல நாவலாசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஸ்ரீ வேணுகோபாலன் (வயது 82). இவர் புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் படைப்புகளை எழுதி வந்தார். திருமணம் ஆகாத இவர், சென்னையில் உள்ள தன்னுடைய சகோதரி வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த புஷ்பா தங்கதுரை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மரணம்
கடந்த 2 வாரங்களாக கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புஷ்பா தங்கதுரையின் உடல்நிலை நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென்று மோசமடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் அவர் இறந்தார்.
பின்னர் அவருடைய வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.
2 ஆயிரம் நாவல்கள்
மறைந்த புஷ்பா தங்கதுரை 2 ஆயிரம் நாவல்களையும், ஆயிரம் சிறுகதைகளையும் எழுதி உள்ளார். இவருடைய ஒரு சில படைப்புகள் இந்தியிலும், பிற தென்னிந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன. ‘‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’’, ‘‘நந்தா என் நிலா’’ என்ற இரண்டு திரைப்படங்கள் இவருடைய நாவலை தழுவி தயாரிக்கப்பட்டன. டி.வி. தொடர்களுக்கு கதைகள் மற்றும் ஆன்மிக கட்டுரைகளும் எழுதி உள்ளார். இவர் 6 லட்சம் புத்தகங்களை சேகரித்தும் உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக