வியாழன், 3 அக்டோபர், 2013

தோழர் தியாகுவின் சாகும்வரை உண்ணாநிலைப்போராட்டம்

திருவள்ளுவன் இலக்குவனார் shared Natarajan Periyar Thondan's status.
தோழர் தியாகுவின் சாகும்வரை உண்ணாநிலைப்போராட்டம் வள்ளுவர் கோட்டம் முன் இன்று மாலை 5 மணி முதல் தொடர்கிரது.முன்னதாக நேற்று காலை 6மணிக்கு வள்ளுவர் சிலைக்குமுன் தொடங்கிய உண்ணாநிலைப்போராட்டம் இன்று இரண்டாம்நாளாக தொடர்கிறது.இந்த செய்தியை நமது ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன. தோழர்கள் இதனை பகிர்ந்து பரப்புமாறு வேண்டுகிறேன்.
காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது,காமன் வெல்த் கூட்டமைப்பில் இலங்கையை நீக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் பொதுச் செயலாளர் தோழர் தியாகு சாகும் வரை உண்ணா நிலைப் போராட்டத்தை மேற்க்கொண்டு உள்ளார்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்,மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, அன்புத் தென்னரசன்,அறிவுச்செல்வன்,ஆவல் கணேசன், அமுதா நம்பி,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பெரியார் அன்பன்,புகழ் மாறன்,வாகை வேந்தன்,அரசகுமார்,காஞ்சி ராசன் மற்றும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். — with சாரதாதேவி சத்தியமூர்த்தி and 19 others.



வெற்றி அல்லது வீரச்சாவு.
தோழர் தியாகுவின் இரண்டாம்நாள் உணவுமறுப்பு போராட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக