செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

மற்றவருக்கு எடுத்துக்காட்டாக இரு!

மற்றவருக்கு எடுத்துக்காட்டாக இரு!


சென்னை ஐ.ஐ.டி.,யில்,மேனேஜ்மென்ட் துறையில்,பிஎச்.டி., பட்டம் பெற்ற,பார்வையற்ற மாற்றுத்திறனாளி கே.சிரீராம்: கண்பார்வையுடன் தான்பிறந்தேன். நான்கு வயதில், விழித் திரையில்ஏற்பட்ட நோய் காரணமாக, கண் பார்வைமெல்ல மெல்ல மங்க துவங்கி, 25வது வயதில் பார்வை முற்றிலும் பறிபோனது.இருந்தாலும், மனம் தளராமல் தொடர்ந்து படித்தேன்.சென்னை, லயோலாகல்லூரியில், பி.காம்.,பெங்களூரு, ஐ.ஐ.எம்.,மில் மேனேஜ் மென்ட் படிப்பு படித்தேன். இதனால், மேனேஜ்மென்ட் துறையில்,பிஎச்.டி., பட்டம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில், சென்னை, ஐ.ஐ.டி.,யில் சேர்ந்தேன். அங்கு, "கார்ப்பரேட் நிறுவனங்களின்சமூக அக்கறை'குறித்து, என் ஆய்வை வடிவமைத்தேன். அறிவியல் துறையில்,பிஎச்.டி., பட்ட ஆய்வுகளில், நிறைய பக்கங்களுக்கு இடமில்லை. ஆனால் மேனேஜ்மென்ட் படிப்பு களில்,அதிக அளவில் ஒப்பாய்வு செய்வதால்,ஆய்வு கட்டுரை அதிகபக்கங்கள் இருக்கும்.என் ஆய்வுகட்டுரை, தலையணைபோல் தூங்குவதற்காக இல்லாமல், படிப்பவர்களுக்கு பயனுள்ளதாகஇருக்க கடினமாகஉழைத்தேன் .இதனால், கார்ப்பரேட் நிறுவனங்களின்சமூக அக்கறை குறித்துமுழுமையாக அறிய,"ஜாஸ்' எனும் கணினிமென்பொருள் உதவியுடன், அது தொடர்பான புத்தகங்களைமுழுமையாக படித்தேன். நன்கு தெரிந்தபின்பே, ஆய்வைஆரம்பித்தேன். இதனால்,ஆய்வு கட்டுரையை சமர்ப்பிக்க,ஆறு ஆண்டுகள்ஆனது. இருப்பினும்,ஆய்வை சரியாகசெய்த மனதிருப்தி கிடைத்தது. நான் தயாரித்த ஆய்வேடு,மேனேஜ்மென்ட்துறை படிக்கும் மாணவர்களுக்கு, சிறந்த வழி காட்டியாக இருக்கும்என, பேராசிரியர்கள்பாராட்டினர்.சென்னை ஐ.ஐ.டி.,யின், 50வது பட்ட மளிப்பு விழாவில்,மாற்றுத் திறனாளியானஎனக்கு, முனைவர்பட்டம் வழங்கப்பட்ட போது, அரங்கத்தில்உள்ள அனைவருமேகை தட்டி ஊக்கப்படுத்தினர். என்னைபார்த்து, மற்றவர்களும் நன்றாக படிக்கவேண்டும் என, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க, பேராசிரியராக பணியாற்றவிரும்புகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக