திங்கள், 5 ஆகஸ்ட், 2013

பூனைகள் குறுக்கே போனால்…

தினஇதழ் Home / அபூர்வ தகவல்கள் / பூனைகள் குறுக்கே போனால்…
பூனைகள் குறுக்கே போனால்…

பூனைகள் குறுக்கே போனால்…

அவசரமாக வெளியே போக…வீட்டு வாசல்படிக்கு வந்திருப்போம். அப்போது பார்த்துதான் ‘ங்கியாவ்வ்வ்வ்…’ என்ற சப்தத்துடன் நமக்கு சில அடிகள் முன்னே பூனை ஒன்று குறுக்கே செல்லும். அதைப் பார்த்தவுடன் ‘அடச் சனியனே… சகுனமே சரியில்ல…. இந்த எழவு குறுக்கே போயிடுச்சா… போற காரியம் வௌங்குன மாதிரிதான்…’ என்று சலிப்புடன் கூறியபடியே வீட்டுக்குள் திரும்பச் சென்று ஒரு செம்பு தண்ணீர் குடித்து விட்டு மீண்டும் வெளியே புறப்படும் பழக்கம் இன்று ஏராளமானோரிடம் உள்ளது.இதில் மட்டும் சாதி, மதம் என்று ஒன்றும் கிடையாது. எல்லா சகுனங்களும் சரியாகப் பார்த்து செய்யும் காரியம் மட்டும் நல்லபடியாக நடக்கிறதா என்றால், அதற்கு வியாக்கியானம் பேசுபவர்கள் ஏராளமாக இருக்கின்றனர்.
மற்ற விலங்குகளை விடுங்கள், அதென்ன பூனை மட்டும் என்ன பாவம் செய்தது. அதற்கு மட்டும் ஏன் இந்த அவப்பெயர். வாருங்கள் தொடர்ந்து படிப்போம். பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள். ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம். மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்
படுத்தினர்.
பூனையைப் பார்த்தால், குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம். அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள். நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம். பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டுவிட்டது. பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை. இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..?பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்..!அதுபாட்டுக்கு அது போகட்டும் நாம பாட்டுக்கு நாம போவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக