திங்கள், 12 ஆகஸ்ட், 2013

மலையாள ஆட்டத்தில் இருந்து பாதுகாக்க ஆணையம் தேவை.


தினஇதழ் Home / சிறப்பு பகுதிகள் / பக்கத்து வீட்டு பெண் என்னை ‘பட்டி’ என்று திட்டுவார்
பக்கத்து வீட்டு பெண் என்னை ‘பட்டி’ என்று திட்டுவார்

பக்கத்து வீட்டு ப் பெண் என்னை ப் ‘பட்டி’ என்று திட்டுவார்

சென்னை, ஆக. 10
மலையாளி லாபிகளிடமிருந்து தமிழக மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறினார்.இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், பக்கத்து வீட்டு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். தன் மீதான குற்றச்சாட்டு குறித்து ஜேம்ஸ் வசந்தன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:‘‘ராதா வேணு பிரசாத், தற்போது நாங்கள் இருக்கும் வீட்டின் இடத்தை கடந்த 2 வருடங்களுக்கு முன்பு விலைக்கு கேட்டார். எங்களுடைய கனவு வீடான அதை விற்க மாட்டோம் என கூறினோம். அதையடுத்து அவர் பல்வேறு வகையில் எங்களை மிரட்டி வந்தார். அவர் அடிக்கடி அத்துமீறி தகாத வார்த்தையில் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதனை தொடர்ந்து கடந்த 2011ம் ஆண்டு, அவர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்.
ஆனால் காவல்துறை முதல் தகவல் அறிக்கையை கூட அவர் மீது பதிவு செய்ய வில்லை. ஒய்வு பெற்ற மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி அவருக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டு வருகிறார். கடந்த ஆகஸ்டு 4ம் தேதி எங்களது வீட்டிற்கு வந்த நீலாங்கரை காவல்துறை ஆய்வாளர் புகழேந்தி, காவல்துறை உதவி ஆணையர் அழைத்து வரச் சொன்னார் என கூறி காவல் நிலையங்களுக்கு, செல்லாமல் தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக உணர்ந்த என் மனைவியும் நானும் அங்கிருந்து புறப்பட முற்பட்ட போது நான் கைது செய்யப்பட்டேன். இதற்கிடையே என்னை பார்க்கும் போதெல்லாம், ‘பட்டி’ (நாய்)என்று அழைப்பார். எனவே இது போன்ற மலையாளி லாபிகளிடமிருந்து அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். இவ்வாறு ஜேம்ஸ் வசந்தன் நிருபர்களிடம் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக