சனி, 3 ஆகஸ்ட், 2013

இராசபாளையம் நாய்கள் குறித்துப் புத்தகம்

இராசபாளையம் நாய்கள் குறித்து ப்  புத்தகம்: விஞ்ஞானி தகவல்

இராசபாளையம் : "" ராஜபாளையம், சிப்பிப்பாறை நாய்களை ஆராய்ச்சி செய்து, இவற்றின் உடலமைப்பு, குணம் குறித்து, புத்தகம் வெளியிட உள்ளதாக, தேசிய விலங்கின மரபியல் ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி பி.கே.சிங் கூறினார். தேசிய விலங்கின மரபியல் ஆராய்ச்சி நிலைய, முதன்மை விஞ்ஞானிகளான பி.கே.சிங், ஏ.கே.மிஸ்ரா, முதன்மை ஆராய்ச்சியாளர் ராஜா, ஆகியோர் 2 நாட்களுக்கு முன்பு ராஜபாளையம் வந்தனர். இவர்களுடன், வந்திருந்த ராஜபாளையம் கால்நடை பல்கலை ஆராய்ச்சி மைய தலைவர் கதிர்வேல், டாக்டர் சீனிவாசன், ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர் தேவேந்திரன் ஆகியோர், நாய் பண்ணைகளை பார்வையிட்டனர். நாய் மற்றும் குட்டிகளின் செயல்பாடுகள், குணம், பண்பு, காவல் காக்கும் தன்மை குறித்து, குறிப்பு எடுத்து கொண்டனர். பின்னர், ராஜபாளையம் பல்கலை மையத்தில் நடந்த கூட்டத்தில், பி.கே. சிங் பேசியதாவது: நாய்கள் குறித்த ஆராய்ச்சிக்காக, இங்கு வந்தோம். முதன்முறையாக ராஜபாளையம் வகை, சிப்பிப்பாறை வகை நாய்களை ஆராய்ச்சிக்கு எடுத்து, இவற்றின் உடலமைப்பு, குணம் குறித்து சிறிய புத்தகம் வெளியிட உள்ளோம். இப்புத்தகம் நூலங்களுக்கு செல்லும்போது, தேசிய அளவில் பலரும், இந்த வகை நாய்கள் பற்றி அறிந்து கொள்வர். நாய் பண்ணையாளர்கள், தங்களுக்குள் ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டு, சந்தைப்படுத்துதலில் இறங்க வேண்டும். விஞ்ஞான முறைப்படி, பராமரித்தலை கற்று கொள்ள வேண்டும். நாய் கண்காட்சி போன்றவற்றை நடத்தவேண்டும். 6 மாதங்கள் பின், மீண்டும் இங்கு ஆராய்ச்சியில் ஈடுபடுவோம்,'' என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக