செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

புதிய தொடரி நிலையத்திற்குத் திருவள்ளுவர் பெயர் சூட்டுக!


மயிலாப்பூரில் தொடங்க இருக்கும் புதிய  தொடரி நிலையத்திற்குத் திருவள்ளுவர்  பெயர் சூட்டுக!

தமிழன்பர்கள் கட்சித் தலை வர்களையும் இயக்கத் தலைவர்களையும் மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்களையும்அணுகி ஆவன செ ய்ய வலியுறுத்தி வாகை சூடுக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

தமிழக அரசியல் நாள் 28.08.2013 செய்தி
மயிலாப்பூர் மக்களுக்கு வசதியாகப் பறக்கும் இரயில் பாதையில் புதிய நி்லையம் ஒன்று தொடங்கப்பட உள்ளது. திரு மயிலைக்கும் கலங்கரை விளக்கத்திற்கும் நடுவில் அமையும் இந்த நிலையத்திற்கு முண்டகக் கண்ணி அம்மன் கோயில் எனப் பெயர் சூட்டியது இரயில்வே நிருவாகம். இப்பகுதியில்  முண்டகக்கண்ணியம்மன் கோயில்போல் நிறைய கோயில்கள் உள்ளன. மேலும் இந்தப் பெயர் வைப்பதற்குச் சில எதிர்ப்புகளும் கிளம்பிய நிலையில் பெ யர்ப் பலகை மூடப்பட்டது.  இந்நிலையில் . . .


" இவை எல்லாவற்றையும் விட, அமைய இருக்கும் நிலையத்தின் மிக அருகில் திருவள்ளுவர் கோயில் உள்ளது. நிலையத்தின் இன்னொரு பக்கம் திருவள்ளுவரின் உருவச்சிலையும் உள்ளது. எனவே, இந்த இரயில் நிலையத்துக்குத் திருவள்ளுவர் கோயில் நிலையம் எனப் பெயர் வைக்க வேண்டும். தமிழ் நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிய அதிகாரிகளிடமும் துறை அமைச்சரிடமும் பேசி, இந்நிலையத்திற்குப் திருவள்ளுவர் கோயில் பெயரைச் சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நியாயமான கோரிக்கை வைக்கிறார் தமிழ்க்காப்புக்கழகத் தலைவர் திருவள்ளுவன் இலக்குவனார்.


தமிழுக்கான நியாயமான கோரிக்கை!
 - சூர்யா
படம் : த.சங்கரன்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக