செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

ஓவியத்தில் கலக்கும் 80 அகவை உடுமலை இளைஞர்

ஓவியத்தில் கலக்கும் 80 அகவை
 உடுமலை இளைஞர்
 http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_78942320130827002940.jpg
உடுமலை :தொழிலில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டால், வயதும் தடையல்ல என்பதற்கு, 80 வயதிலும் ஓவியத்தில், முத்திரை பதிக்கும் உடுமலை முதியவர் உதாரணமாக செயல்பட்டு வருகிறார். தான் பயின்ற கலை தன்னோடு அழியாமல் தொடர இளைஞர்களுக்கு ஓவியப்பயிற்சியளிக்கும் இவரது முயற்சி பாராட்டத்தக்கதாகும்.

உடுமலை திருப்பூர் ரோட்டில் உள்ள வளாகத்தில், "பெண்டா சிஸ்டம்ஸ்' செயல்பட்டு வருகிறது. இக்கடைக்குள் சென்றால், விளம்பர பலகைகள் எழுதுவதில், மும்முரமாக ஒரு 80 வயது இளைஞர் ! ஈடுபட்டு வருகிறார்.விளம்பர பலகைகள் எழுத அழைத்தால், இவ்வளவு வயதிலும் சுறுசுறுப்பாக கிளம்பும் இவரது பெயர் நடராசன். விளம்பர பலகைகள் மட்டுமல்ல "ஆயில் பெயிண்டிங்', "பைன் ஆர்ட்ஸ்' ஆகிய முறைகளில் இவரது படைப்புகளை பார்த்தால், ஆச்சரியத்தில் கண்கள் விரியும்.நம்மோடு பேசுவது போல காணப்படும் சிவன், பார்வதி, கண்களை மூடி சிரிக்கும் காந்தி, சிந்தனையுடன் தாகூர் உட்பட பல்வேறு ஓவியங்கள் இவரது திறமைக்கு சான்று அளிக்கின்றன. இந்த வயதிலும் கண்களில் எந்த குறைபாடும் இல்லாததால், கண்ணாடி அணியாமல் ஓவியங்களை முழு ஈடுபட்டுடன் வரைகிறார்.

வண்ணக்கலையில், மூழ்கிய இவருக்கு கண்மணி என அவராக பெயர் சூட்டியுள்ள பெண் தெய்வங்களை வரைவதில் அலாதி பிரியம். உடுமலை மாரியம்மனை பல்வேறு கோணங்களில் வரைந்து, தனது இறையுணர்விற்கு அர்ப்பணம் செய்துள்ளார்.நடராஜன் தற்போதும் அரசு அலுவலகங்களில், தகவல் பலகை எழுதுதல் உட்பட பணிகளை யாருடைய உதவியும் இல்லாமல் மேற்கொண்டு அனைவரின் ஆச்சரியத்தை பெற்றுள்ளார். எப்போது, துவங்கியது இந்த ஓவியப்பயணம், எதிர்கால திட்டம் என்ன என்பது குறித்து நடராஜனிடம் பேசுகையில், கடந்த 1934 ம் ஆண்டு பிறந்த நான், திருச்சூர் கலைக்கல்லூரியில், 1952 ம் ஆண்டு ஓவியப்படிப்பை முடித்தேன். 1953 ம் ஆண்டு ஏ.நாகூர் மேல்நிலைப்பள்ளியில், ஓவிய ஆசிரியராக பணியில் சேர்ந்து 1967 ம் ஆண்டு வரை பணியாற்றினேன். விருப்ப ஓய்வு பெற்ற பின், முழுமையாக ஓவியம் மற்றும் விளம்பர பலகை எழுதும் துறையில் ஈடுபட்டேன்.கம்ப்யூட்டர் காலம் துவங்கி, ப்ளக்ஸ் போர்டு கலாசாரம் வேகமாக பரவியுள்ளது. இதனால், ஓவியப்படிப்பு படித்தவர்கள் பயப்பட வேண்டியதில்லை. காலத்திற்கு நாமும் மாறினால் மட்டுமே சாதிக்க முடியும். " ப்ரீ ஹோண்ட்', பெயிண்டிங், "ஜியாமாண்டிரிக்கல் டிராயிங்', "டிசைன்', ஆகிய பிரிவுகளில் பயிற்சி பெற்று போட்டித்தேர்வுகள் மூலம் அரசுப்பணியில் சேரலாம்.இதற்கான பயிற்சிகளை இளைஞர்களுக்கு தற்போதும் அளித்து வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக