செவ்வாய், 23 ஜூலை, 2013

நீரிழிவு நோய்க்குப் பயப்படாதீர்கள்!

நீரிழிவு நோய்க்கு ப் பயப்படாதீர்கள்!

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களும்,  நலமான குழந்தையை ப் பெற்றெடுக்கலாம் என்கிறார், மருத்துவர் சண்முகம்: நான், நீரிழிவு நோய் நிபுணராக பணியாற்றுகிறேன். "சுகர், டயாபடீஸ்' எனும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, "சிசேரியன்' மூலம், ஆரோக்கியமற்ற குழந்தை தான் பிறக்கும் என்ற கருத்து நிலவுகிறது. இது முற்றிலும் தவறு.ஒரு பெண், கருத்தரிப்பதற்கு முன்பே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், மகப்பேறு மற்றும் நீரிழிவு மருத்துவரிடம், கருத்தரிப்பிற்கு முந்தைய ஆலோசனை பெறுவது அவசியம். மருத்துவச் சிகிச்சையை தொடர்வதன் மூலம், "நார்மல் டெலிவரி'யுடன் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.நீரிழிவு நோய் இருந்தால், கருத்தரிப்பிற்கு முந்தைய மூன்று மாதங்களுக்கு முன், "எச்பிஏ1சி' என்ற ரத்த பரிசோதனை செய்து, "போலிக் ஆசிட்' மாத்திரைகளை உட்கொண்டு, தாய்மை அடைவதற்கான உடல் பலத்தை பெறலாம். கர்ப்பிணிகள், நீரிழிவு நோய்க்கான மாத்திரைகள் சாப்பிட்டால், அதன் வீரியம் குழந்தையை பாதிக்கும்.ஏனெனில், கருவில் இருக்கும் குழந்தைக்கு தேவையான சத்துகள், தாயின் நஞ்சு கொடி மூலமே போகும். இதனால், பிறக்கும் குழந்தைக்கு உடல் உறுப்பு குறைபாடு முதல், பல பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, "இன்சுலின்' ஊசி மூலம், மாத்திரை போடுவதை தவிர்க்கலாம்.ரத்தத்தில், சர்க்கரையின் அளவு, வெறும் வயிற்றில், 90 மி.கி., சாப்பிட்ட பின், 120 மி.கி., இருக்க வேண்டும். சர்க்கரை அளவை தினமும் கண்காணித்து, கட்டுப்படுத்துவது அவசியம். இதற்காக, மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற தேவையில்லை. குளுகோ மீட்டரில் சர்க்கரை அளவை சரிபார்க்கவும்; இன்சுலின் ஊசி போட, நாமே கற்று, வீட்டிலேயே சிகிச்சை பெறலாம்.சர்க்கரை அளவை கட்டப்படுத்தும் உணவுகளை, கர்ப்ப காலத்தில் கடைபிடிப்பது முக்கியம். சிலருக்கு, கர்ப்ப கால நீரிழிவு நோய் வரும். குழந்தை பிறந்தவுடன், இப்பிரச்னை சரியாகிவிடும் என்பதால், எந்த பயமும் தேவையில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக