புதன், 19 ஜூன், 2013

சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்குத் தொடரி


சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு அன்றாடம் தொடரி அறிமுகம்

சென்னை எழும்பூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஜூன் 22-ம் தேதியில் இருந்து தினசரி ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது இணைப்பு ரயிலாக வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்:
ரயில் எண் 16185: சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு வேளாங்கண்ணிக்கு சென்றடையும். ரயில் எண் 16186: வேளாங்கண்ணியில் இருந்து சென்னை இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.25 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.இந்த ரயில் (ரயில் எண் 16185/16186 ) சென்னை எழும்பூரில் இருந்து செல்லும் காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்கப்பட்டு நாகப்பட்டினம் வரை இயக்கப்படும். இந்த ரயில் நாகப்பட்டினம், திருவாரூர், பேரளம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், திருபாதிரிபுலியூர், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக