புதன், 1 மே, 2013

களைப்பு இல்லாத உழைப்பு : -இன்று உலகத் தொழிலாளர் நாள்-

களைப்பு இல்லாத உழைப்பு : -இன்று உலக த் தொழிலாளர்  நாள்-
தொழிலாளர் இல்லையெனில் உலகம் இயங்காது. எத்தனையோ வித தொழிலாளர்கள் உலகளவில் உள்ளனர். அவர்களுக்கு உரிய உரிமைகள் தொடர்ந்து வழங்க வேண்டும் என்பதே இத்தினத்தின் நோக்கம்.
சமூக, பொருளாதார உலகில் தொழிலாளர்களின் பங்களிப்பை பாரட்டும் விதமாகவும், அவர்களை கவுரவிக்கும் விதமாகவும் மே 1ம் தேதி, உலக தொழிலாளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு "8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர தூக்கம்' என்ற வகையில் இருக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. இந்தியா உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இத்தினத்துக்காக விடுமுறை விடப்படுகிறது.
எப்படி வந்தது
முன்பெல்லாம், தற்போது உள்ள நடைமுறைகள் தொழிலாளர்களுக்கு கிடைத்ததில்லை. 18ம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் கட்டாயம், வேலை செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது. தகுதியான ஊதியமும் வழங்கப்படுவதில்லை.
இதை எதிர்த்து, தொழிலாளர்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் மூலம் அவர்களது கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. இப்போராட்டங்கள் தான், தொழிலாளர் தினம் உருவாக காரணமாக அமைந்தன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக