வெள்ளி, 5 ஏப்ரல், 2013

தேர்வாவது எப்படி!


தேர்வாவது எப்படி!தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வழி முறைகளை விளக்கும், பெ.வெங்கடாசலம்: நான், மதுரையில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட்டில், நிர்வாக இயக்குனராக இருக்கிறேன். தமிழக அரசு நடத்தும், ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் போட்டித் தேர்வுக்கு, தமிழக அரசின் பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்கள் மட்டும், தகுதியானவர்களா அல்லது இந்தியாவின் மற்ற மாநிலங்களில் படித்தவர்களுக்கும் தகுதி இருக்கிறதா என, குழப்பம் இருக்கிறது. தமிழக வேலை வாய்ப்பு அலுவலகத்தில், முறைப்படி பதிவு செய்த அனைவரும், தமிழக அரசு நடத்தும் தகுதித் தேர்வில் பங்கேற்கலாம். டி.ஆர்.பி., எனும் ஆசிரியர் தேர்வு வாரியம், 1ம் வகுப்பிலிருந்து, 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, இடைநிலை ஆசிரியர் தேர்வும்; 6லிருந்து, 8ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் தேர்வும் என, இரண்டு விதமாக நடத்துகிறது. இடைநிலைக்கு, 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு மற்றும் பட்டயப் படிப்பிற்கான பாடத் திட்டத்தின் படியும்; பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 6 முதல் பிளஸ் 2 மற்றும், பி.எட்., படிப்பிற்கான பாடத் திட்டத்தின் படியும், டி.ஆர்.பி., நடத்தும், டி.இ.டி., எனும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயாராக வேண்டும். ஆசிரியருக்கான காலிப் பணியிடங்களை அரசு அறிவிக்கும் போது, டி.இ.டி., தேர்வில் வென்றவர்கள் மட்டுமே, விண்ணப்பிக்க முடியும். தகுதி பெறாதவர்கள், அடுத்தடுத்து நடைபெறும், டி.இ.டி., தேர்வில் வெற்றி பெறலாம். தற்போது, காலிப் பணியிடங்கள் அதிகம் என்பதால், டி.இ.டி., தேர்வில் வென்றதுமே, பணி உறுதி செய்யப்படுகிறது. ஒருவேளை, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை விட, டி.இ.டி., தேர்வில் வென்றவர்கள் அதிகமானால், போட்டியை நிர்ணயிக்க, டி.இ.டி., மதிப்பெண்ணோடு, பிளஸ் 2, பட்டயம் அல்லது கல்லூரி மதிப்பெண்களுக்கும், குறிப்பிட்ட புள்ளிகள் வழங்கியோ அல்லது அரசின் அப்போதைய மாறுதல் படியோ, இறுதி நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்புக்கு: 90470 34271.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக