சனி, 13 ஏப்ரல், 2013

28 நூலாசிரியர்களுக்குப் பரிசு: செயலலிதா உத்தரவு

சிறந்த தமிழ் நூல் எழுதிய 28 நூலாசிரியர்களுக்கு உரூ.30 ஆயிரம் வீதம் பரிசு: செயலலிதா உத்தரவு
 
சிறந்த தமிழ் நூல் எழுதிய 28 நூலாசிரியர்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் பரிசு: ஜெயலலிதா உத்தரவு
சென்னை, ஏப். 13-தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி க் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சிறந்த தமிழ் நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் போட்டிக்கு வரப்பெறும் நூல்களில் சிறந்த நூல்களைத் தேர்வு செய்து அந்நூல்களை எழுதிய ஆசிரியர்கள் மற்றும் பதிப்பித்த பதிப்பகத்தார்களை ஊக்குவிக்க பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகின்றன.

அதன்படி 2011ஆம் ஆண்டு வெளிவந்த நூல்களில் 28 வகைப்பாடுகளில் சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு 28 நூல்களுக்கான ஆசிரியர்கள் மற்றும் அந்நூல்களை பதிப்பித்த 22 பதிப்பகத்தாருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நூலாசிரியர் ஒவ்வொருவருக்கும் ரூ.30,000-மும், பதிப்பகத்தாருக்கு நூல் ஒன்றுக்கு ரூ.10,000-மும் பரிசாக வழங்கப்படும். மேலும் 1330 குறட் பாக்களை முற்றோதல் செய்யும் மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு திருக்குறள் ஒப்புவித்த 36 மாணவ-மாணவியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.10,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

மேலும் மாநில அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 18 மாணவ-மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.15,000, இரண்டாம் பரிசாக ரூ.12,000, மூன்றாம் பரிசாக ரூ.10,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

பரிசு பெறும் நூலாசிரியர்கள் விவரம் வருமாறு:-

மரபுக் கவிதை - முனைவர் மு.இளங்கண்ணன்
புதுக்கவிதை - கவிஞர் நாவேந்தன்
புதினம் - அரு.மருததுரை
சிறுகதை - செல்வி பர்வின்பானு
நாடகம் (உரைநடை, கவிதை) - கவிமுகில் நா. கோபாலகிருஷ்ணன்
திறனாய்வு- பெ.அ. இளஞ்செழியன்
மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் - முனைவர் ப.வேல்முருகன்

பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் - புவியரசு
நுண்கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்) - முனைவர் கு.சேதுராமன்
அகராதி, கலைக்களஞ்சியம், கலைச்சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் - ஆரூர் தாஸ்
பயண இலக்கியம் - ப.முத்துக்குமார சுவாமி
வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு - டி. பவா செல்லதுரை

நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு - முனைவர் கி.கிரா.சங்கரன்
கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல் - இரா. சிவராமன்
பொறியியல், தொழில் நுட்பவியல் - கதிரவன் கிருஷ்ணமூர்த்தி மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல் - முனைவர் கி.அய்யப்பன்

சட்டவியல், அரசியல் - முனைவர் ஆ.ஜெகதீசன்
மருந்தியல், உடலியல், நலவியல் - டாக்டர் ஜெயம் கண்ணன்

தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) - 1. டாக்டர் இல.மகாதேவன்,
2. டாக்டர் ஒய். மகாதேவ ஐயர்ஸ்.
சமயம், ஆன்மிகம், அளவையியல் - இராமநாதன் பழனியப்பன்
கல்வியியல், உளவியல் - கவிஞர் சுடர் முருகையா

சுற்றுப்புறவியல் - வேணு சீனிவாசன்
நாட்டுப்புறவியல் - டாக்டர் சிவ. விவேகானந்தன்
வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியம் - அகிலேஸ்வரன் சாம்பசிவம்
இதழியல், தகவல் தொடர்பு - மா.ரா.அரசு
பிற சிறப்பு வெளியீடுகள் - வெ.நல்லதம்பி
தமிழர் வாழ்வியல் - முனைவர் பி.சேதுராமன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக