வெள்ளி, 15 மார்ச், 2013

மத்திய அரசு பணியாளர் தேர்வு முறை மாற்றங்கள் நிறுத்தம்

மத்திய அரசிற்குப் பாராட்டுகள். கண் துடைப்பாக அல்லாமல் அனைத்து மொழிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். கட்சி வேறுபாடின்றிப் போராடிய தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராட்டுகள். இது குறித்து மடல் எழுதிய முதல்வருக்கும் பாராட்டுகள். உடனே அவர் தமிழகத்  தேர்வாணையத்திலும் தமிழுக்கு முதன்மை அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து நிலைகளிலும் தமிழ் வழிக் கல்வி அமைய ஆவன செய்ய வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மத்திய அரசு பணியாளர் தேர்வு முறை மாற்றங்கள் நிறுத்தம்





மத்திய அரசுப் பணியாளர் தேர்வு முறையில் கொண்டுவரப்பட்ட பல்வேறு மாற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வு முறையில் மாநில மொழிகளைப் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
இன்று காலை முதல் 3 முறை மக்களவை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் முடங்கியது. இந்த நிலையில், மக்களவையில் பேசிய மத்திய இணை அமைச்சர் வி. நாராணயசாமி, இந்த விஷயம் குறித்து யுபிஎஸ்சி அதிகாரிகளுடன் மத்திய அரசு விரிவாக ஆலோசனை நடத்திய உரிய நடவடிக்கை எடுக்கும். அதற்கிடையே, யுபிஎஸ்சி வெளியிட்ட புதிய மாற்றங்கள் குறித்த அறிவிப்பு நிறுத்தி உடனடியாக வைக்கப்படுகிறது என்று அறிவித்தார்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

யு.பி.எஸ்.சி. தேர்வில் புதிய விதிமுறை நிறுத்தம்: மத்திய அரசு அறிவிப்பு
யு.பி.எஸ்.சி. தேர்வில் புதிய விதிமுறை நிறுத்தம்: மத்திய அரசு அறிவிப்பு
புதுடெல்லி, மார்ச் 15-

யு.பி.எஸ்.சி. தேர்வு முறையில் புதிய விதிமுறைகைள மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்ததாலும், பிராந்திய மொழிகளில் இத்தேர்வுகளை எழுத பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததாலும் பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

இப்பிரச்சினை இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. இதுதொடர்பாக பேசிய உறுப்பினர்கள், யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதுவதற்கான புதிய விதிமுறையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டு 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து உறுப்பினர்களின் விவாதத்திற்குப் பதிலளித்து பேசிய மத்திய இணை மந்திரி நாராயணசாமி, “புதிய விதிமுறைகள் தொடர்பாக யு.பி.எஸ்.சி. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தீர்வு காணப்படும். அதுவரை இந்த விதிமுறை மாற்றம் தொடர்பான அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. தீர்வு காணப்படும் வரை யு.பி.எஸ்.சி. தேர்வில் பழைய முறையே தொடரும்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக