செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

தமிழகத்தின் நீச்சல் மங்கை!

தமிழகத்தின் நீச்சல் மங்கை!


தில்லி காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற, தமிழக நீச்சல் வீராங்கனை, இராகவி: சென்னை, திருவல்லிக்கேணியில் வசிக்கிறேன். எஸ்.ஐ.இ.டி., கல்லூரியில், பி.காம்., இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். அப்பா, சென்னை மாநகராட்சியில் கட்டட வேலை செய்கிறார். அப்பா, இரண்டு வயதிலேயே சென்னை மாநகராட்சியின், நீச்சல் குளத்தில் நீச்சல் பழக கூட்டிச் செல்வார்.ஐந்து வயதிலேயே, நீச்சல் குளத்தில், 6 கி.மீ., தூரம், தொடர்ந்து நீந்தி, திறமையை நிரூபித்தேன். 2001ம் ஆண்டில் நடந்த, மாநில அளவிலான, 200 மீட்டர் , "பிரெஸ்ட் ஸ்ட்ரோக்' பிரிவில், தங்கப் பதக்கம் பெற்றேன். இதுதான், நான் பெற்ற முதல் வெற்றி பதக்கம்.தொடர்ந்து, "பிரெஸ்ட் ஸ்ட்ரோக்' நீச்சல் பிரிவில், நிறைய வெற்றிகள் பெற்றதால், அப்பிரிவிலேயே கவனம் செலுத்த துவங்கினேன். 2006ம் ஆண்டு, டில்லியில் நடந்த தேசிய நீச்சல் போட்டியில், 50 மீட்டர், "பேக் ஸ்ட்ரோக்' மற்றும் "பிரெஸ்ட் ஸ்ட்ரோக்' பிரிவில் தங்கப் பதக்கம் வாங்கினேன்.கடந்த, 2008ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில், தேசிய அளவில் தங்கப் பதக்கம் வாங்கினேன். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, 200 மீட்டர், "பிரெஸ்ட் ஸ்ட்ரோக்' பிரிவில் தேசிய அளவில் முதலிடம் பெற்றேன்.டில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும், துபாயில் நடந்த சர்வதேச போட்டியிலும் கலந்து கொண்டேன் .கடந்த, 16 ஆண்டுகளில் மாநில மற்றும் தேசிய நீச்சல் போட்டிகளில், பல பதக்கங்களை பெற்றிருக்கிறேன். கடந்த ஆண்டு, 200 மீட்டர், "பிரெஸ்ட் ஸ்ட்ரோக்' பிரிவில், 2.46 நிமிடம், 92 மைக்ரோ நொடிகளில், "ரெக்கார்டு பிரேக்' செய்து, தேசிய அளவில் புதிய சாதனை நிகழ்த்தினேன். நீச்சல் வீரர் அக்னீஷ்வரின் அப்பா ஜெயப்பிரகாஷ் தான், இதுவரை, "ஸ்பான்சர்' செய்து வருகிறார். வரும், 2016ம் ஆண்டு, பிரேசில் ஒலிம்பிக் போட்டியில், பதக்கம் வெல்வதே என் லட்சியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக