புதன், 13 பிப்ரவரி, 2013

ஓவியத்தில் வெற்றிக்கொடி நாட்டிய தமிழக ச் சிறுமி!

ஓவியத்தில் சாதித்த தமிழக ச் சிறுமி!

ஓவியப் போட்டியில், 30 லட்சம் பள்ளி குழந்தைகளில், முதலிடம் பெற்று, ஜனாதிபதியிடம் பரிசு வாங்கிய, 5ம் வகுப்பு மாணவி ரோஷிணி: நான், சென்னை அண்ணா நகரில், தனியார் பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கிறேன். அப்பா, அம்மா, அண்ணன் ரோஷித் என, அனைவரும், நான் எல்.கே.ஜி., படிக்கும் போதே, ஓவியம் வரைய கற்றுக் கொடுத்து ஊக்கப்படுத்தினர். ஓவியம் வரைய, சிறப்பு வகுப்புகளுக்கு செல்லாமல், வீட்டிலேயே வரைய ஆரம்பித்தேன். மின் சேமிப்பு குறித்து, மாநில அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில், தமிழகத்திலேயே முதலாவதாக வந்து, மின் துறை அமைச்சரிடம், பரிசு பெற்றேன். இப்போட்டி முடிந்த ஒரு மாதத்தில், மத்திய மின்துறையின், "பீரோ ஆப் எனர்ஜி எபிஷியன்சி' அமைப்பின், தேசிய அளவிலான ஓவியப் போட்டியில், 30 லட்சம் பள்ளி மாணவியரில் ஒருவராக, நானும் கலந்து கொண்டேன்.மாநிலப் போட்டியில் வென்ற அனுபவத்தை பயன்படுத்தி, நல்ல ஓவியம் வரைந்து, 105 பேர் மட்டுமே பங்கு பெறும் இறுதி சுற்றுக்குள் நுழைந்தேன். போட்டிக்கு முன்னரே, வரையப் போகும் ஓவியத்திற்கான தலைப்பை தந்து, பெற்றோருடன் கலந்தாலோசிக்க செய்தனர். ஏனெனில், ஓவியம் வரையும் இடத்திற்கு, பெற்றோருக்கு அனுமதி இல்லை.கொடுக்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில், "சேவ் எனர்ஜி, சேவ் மணி' என்ற தலைப்பில், ஓவியம் வரைந்தேன். 30 லட்சம் பேரில், என் ஓவியம், முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, என் ஓவியத்தை பார்த்து பாராட்டி, பரிசுத் தொகையாக, ஒரு லட்ச ரூபாய், பாராட்டு சான்றிதழ், கடிகாரம், "லேப்-டாப்' ஆகியவற்றை வழங்கினார்.எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இத்தேசியப் போட்டியில், தமிழகம் சார்பில், முதல் முறையாக வெற்றி பெற்றது, நான் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக