செவ்வாய், 22 ஜனவரி, 2013

எம்.எசு. உதயமூர்த்தி மறைவு: வைகோ இரங்கல்

எம்.எசு. உதயமூர்த்தி மறைவு: வைகோ இரங்கல்




மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனர் எம்.எஸ். உதயமூர்த்தியின் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்:
அமெரிக்காவில் ஆற்றிய பணி, வசதியான வாழ்க்கையைத் துறந்து தமிழகத்தின் முன்னேற்றத்துக்குத் தன்னால் இயன்ற தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தவர் எம்.எஸ். உதயமூர்த்தி.உன்னால் முடியும் தம்பி என்ற அவரது நூல் 1980-களில் தமிழக இளைஞர்களை வெகுவாக ஈர்த்தன. உன் திறமைகளை வளர்த்துக் கொள், பொருளாதாரத்தில் முன்னேறு, சமுதாயத்துக்கு தொண்டாற்று என்பதை வலியுறுத்தி இளைஞர்களிடம் முற்போக்குச் சிந்தனைகளை விதைத்தார்.
எண்ணங்கள், நீதான் தம்பி முதல் அமைச்சர், ஆத்ம தரிசனம் என இவர் எழுதிய 10 நூல்களும் நம்பிக்கை முத்துக்கள். 1988-ல் மக்கள் சக்தி இயக்கத்தை தொடங்கி நதிநீர் இணைப்பு, கிராம முன்னேற்றம், மதுவிலக்கு ஆகியவற்றுக்காகப் பாடுபட்டார். அவரது மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மக்கள் சக்தி இயக்கத்தினருக்கும் மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வைகோ தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக