ஞாயிறு, 23 டிசம்பர், 2012

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மனைவி மரணம்

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மனைவி மரணம்

திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான  க.அன்பழகன் மனைவி சாந்தகுமாரி இன்று காலமானார் .

தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் மனைவி சாந்தகுமாரி மரணம்: கருணாநிதி-மு.க.ஸ்டாலின் அஞ்சலி
தி.மு.க. பொதுச்செயலாளர்
 அன்பழகன் மனைவி
 சாந்தகுமாரி மரணம்: கருணாநிதி-மு.க.ஸ்டாலின் அஞ்சலி
சென்னை, டிச. 23-

தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் மனைவி   சாந்தகுமாரி. நீரழிவு நோயினால்  அவதிப்பட்டு வந்தார். அண்ணாநகரில்  உள்ள கலாநிதி ஆஸ்பத்திரியில் கடந்த 8 மாத காலமாக சிகிச்சை பெற்றார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78.

சாந்தகுமாரி உடல் அண்ணாநகர் சாந்தி காலனி 3-வது  அவென்யூவில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி நேரில் சென்று சாந்தகுமாரி உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

பேராசிரியர் அன்பழகனுக்கு அவர் ஆறுதல் கூறினார். பொருளாளர் மு.க. ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், தா.மோ. அன்பரசன், தொ.மு.ச. பொருளாளர் சிங்காரபரத்தினசபாபதி, முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் பகுதி செயலாளர் ராமலிங்கம், சன்பிராண்ட் ஆறுமுகம் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினார்கள். சாந்தகுமாரியின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. அரும்பாக்கம் இடுகாட்டில் உடல் தகனம் செய்யப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக