சனி, 20 மார்ச், 2010

தமிழகத்தில் அடுத்து காங்கிரஸ் ஆட்சிதான்



ஆரணி, மார்ச் 19: தமிழகத்தில் அடுத்து காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்று ஆரணி மக்களவை உறுப்பினர் எம்.கிருஷ்ணசாமி கூறினார். ஆரணியில் நிருபர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியது: ஆரணியில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மார்ச் 28-ல் நடைபெற உள்ளது. இதில் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பங்கேற்கிறார். தற்போது இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமை பெற்று வருகிறது. அடுத்த ஆட்சி காங்கிரஸ் ஆட்சிதான். தற்போது இளைஞர்கள் மத்தியில் ராகுல்காந்திக்கு பெரும் வரவேற்பு உள்ளது. ஆகையால் இளைஞர்களிடையே பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கொள்கை, செயல்பாடுகள், திட்டங்கள் மற்றும் ராகுலின் அணுகுமுறை ஆகியவை இளைஞர்களை காங்கிரஸ் கட்சியில் சேர தூண்டுகிறது. இளைஞர் காங்கிரஸின் மாநிலத் தேர்தல் வருவதற்குள் மீண்டும் ராகுல்காந்தி தமிழகம் வருவார். ராகுல்காந்தி அடிக்கடி தமிழகத்திற்கு வந்து செல்வதன் மூலம் காங்கிரஸ் கட்சி எழுச்சி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றார்.மாவட்டத் தலைவர் டி.பி.ஜே.ராஜாபாபு, மாநில சிறப்பு அழைப்பாளர்கள் பி. கருணாமூர்த்தி, அசோக்குமார், மாவட்ட கவுன்சிலர் ஏ.பழனி உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக, ஆரணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மார்ச் 28-ம் தேதி நடைபெறவுள்ள மத்திய பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கிருஷ்ணசாமி பங்கேற்றார்.
கருத்துக்கள்

கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு. அதுவும் ஒவ்வொரு காங்கிரசு எடுபிடிகளும் தங்களை வருங்கால முதல்வர எனக் கனவு காண்பதிலும் தடையில்லை. ஆனால் அனைவரையும் திடீரென்று சேர்க்க விரும்பினால் கீழ்ப்பாக்கத்தில் இடம் இருக்காது. கூரைஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம். அப்படித்தான் கனவு உள்ளது. கூட்டணி ஆட்சியில் பதவி வாங்கத் தெரியாதவர்கள தனித்து ஆட்சி அமைக்கப் போகிறார்களாம். இந்தியாவிலும் ஈழத்திலும் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடராதிருக்க காங்கிரசு அடியோடு மண்ணைக் கவ்வ வேண்டும். இந்தியா வலிமையான கூட்டரசு நாடாகத் திகழ காங்கிரசுக் கட்சி இந்தியாவில் இருந்த இடம் தெரியாமல் போக வேண்டும். அதில் மனித நேயம் மிக்கவர்கள் இருப்பின் அதனை விட்டு வெளியேற வேண்டும். காங்கிரசு மறைந்த இந்தியா துன்பம் மறைந்த இந்தியா!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/20/2010 10:26:00 AM

Mudiyala..............

By raj
3/20/2010 10:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
வாஞ்சிநாதன் உள்ளிட்ட மூன்று தலைவர்களுக்கு மணிமண்டபம்: தமிழக அரசு



சென்னை, மார்ச் 19: ""வாஞ்சிநாதன், கோபால் நாயக்கர், ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் ஆகிய மூவருக்கும் மணிமண்டபம் அமைக்கப்படும்'' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.""சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் தியாகத்தைப் போற்றும் வகையில், அவர் பெயரில் மணிமண்டபம் கட்டுவதற்கு கடந்த 1957}ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இதுவரை மண்டபப் பணி தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தியாகி வாஞ்சிநாதன் பிறந்த செங்கோட்டையில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்படும். தென்னிந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டவர் கோபால் நாயக்கர். நாட்டு விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த கோபால் நாயக்கரின் நினைவாக விருப்பாட்சியில் மணிமண்டபம் நிறுவப்படும்.1947}ம் ஆண்டில் இருந்து 1949 வரை தமிழகத்தின் முதல்வராக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இருந்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில், அவரது சொந்த ஊரான ஓமந்தூரில் மணிமண்டபம் அமைக்கப்படும்.ஒண்டிவீரனுக்கு:அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு அவரது நினைவைப் போற்றும் வகையில் தக்கதோர் நினைவுச் சின்னம் நெல்லையில் எழுப்பப்படும்.தியாகராஜ பாகவதருக்கு...தமிழ்த் திரையுலகின் அரும்பெரும் சாதனையாளரான எம்.கே.தியாகராஜ பாகவதரின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது'' என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
கருத்துக்கள்

தமிழரல்லாதவர்களுக்குத் தமிழர்கள் வரிப்பணத்தில் நினைவு மண்டபங்கள் எழுப்பப்டுகின்றன. இருப்பினும் தமிழ் நாட்டவர் என்னும் பெருந்தன்மையுடன் தமிழர்கள் இவற்றை ஏற்கின்றனர். தமிழினத்தலைவர்களையும் சிறப்பு செய்ய வேண்டும். 2.) சாதிப்பற்றின் காரணமாக (பிராமணர் தெருவில் இறுதி ஊர்வலத்திற்கு இசைவு அளித்த) ஆட்சியாளர் ஆசு என்பாரைச் சுட்டுக் கொன்றவரை ஆரியர் என்பதால் நாம் விடுதலை வீரராக ஏற்கிறோம். ஆனால், எண்ணற்ற படுகொலைகளைப் புரிவோரை எதிர்க்கும் போராளிகளை அவர்கள் தமிழர்கள் என்பதற்காக நாம அழிக்கிறோம். என்னே முரண்பாடு! என்று திருந்தும் இந்த நாடு! நம் நாட்டுப் போரளிகளை மதிக்கும் நாம் அயல்நாட்டுப் போராளிகளையும் மதிப்போமாக! நம் நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் அயலவரை எதிர்க்கும் நாம் அயலநாட்டில் ஆதிக்கம் செலுத்த எண்ணும் நம் நாட்டு ஆட்சியாளரையும் எதிர்ப்போமாக! உலகம் உய்வதற்காகத் தம்மையே இழக்கும் போராளிகள் வெல்க! போராளிகளுக்கு வேலையின்றி உரிமையும் மனித நேயமும் இலங்கும் மன்பதை உருவாகுவதாக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/20/2010 3:28:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
முல்லைப் பெரியாறு பிரச்னை: உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம்: கருணாநிதி



சென்னை, மார்ச் 19: ""முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம்'' என்று முதல்வர் கருணாநிதி உறுதிபடத் தெரிவித்தார்.சென்னையில் திமுக இளைஞர் அணியின் தலைமை அலுவலகமான அன்பகத்தில் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்குப் பின், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கருணாநிதி அளித்த பதில்:முல்லைப் பெரியாறு பிரச்னையில் மத்திய அரசு இரண்டு மாத கால அவகாசம் கேட்டுள்ளது. இதைப் பற்றி நிதிநிலை அறிக்கையில் ஒன்றும் சொல்லப்படவில்லையே?மத்திய அரசின் மீது குற்றச்சாட்டு கூற வேண்டுமென்று எதிர்பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டு இருக்கிறீர்கள். அது தேவையில்லாதது. முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னைதான் நம்முடைய முக்கியமான பிரச்னை. அதிலே, நம்முடைய உரிமையை விட்டுக் கொடுத்து, அந்தப் பகுதியிலே உள்ள விவசாயிகளுக்கு எதிர்காலத்தில் வேதனைக்கு வித்திடக் கூடாது என்பது தான் முக்கியம். இது தான் என்னுடைய கருத்து.புதிய சட்டப் பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கறுப்புச் சட்டை அணிந்து வந்திருந்தார்களே. அதைப் பற்றி?ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரில் நடப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமென்று கோரி, உச்ச நீதிமன்றத்திலே ஜெயலலிதா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், நீதிமன்றத்தில் கூறப்பட்ட தீர்ப்பில் ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மனுவினை தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்து இருப்பார்கள். அதைத் தெரிந்து கொண்டு, கறுப்புச் சட்டை அணிந்து கொண்டு வந்திருக்கிறார்கள் போலும்.பென்னாகரம் இடைத் தேர்தல் பிரசாரத்துக்கு மட்டும் செல்வது ஏன்?பிரசாரத்துக்காக நான் வரவில்லையே என பென்னாகரம் வாக்காளர்கள் வருத்தப்படக் கூடாது என்பதற்காகச் செல்கிறேன்.பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக பாமக கூறியிருக்கிறதே?அவர்களுக்கு எவ்வளவோ ஏமாற்றங்கள்! அதற்கு நான் என்ன செய்ய முடியும்?
கருத்துக்கள்

உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என முதலவர் பேசினாலே உரிமைகள் பறிபோகின்றன என்பதுதான் வரலாறு காட்டும் உண்மை. வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/20/2010 3:17:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரி



சென்னை, மார்ச் 19: ""திருவண்ணாமலையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்'' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.புதிய சட்டப் பேரவையில் 2010-2011-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து நிதிமையச்சர் க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பு:""கடந்த நான்கு ஆண்டுகளில் தர்மபுரி, விழுப்புரம், திருவாரூர், சிவகங்கை, பெரம்பலூர் மாவட்டத் தலைநகரங்களில் புதிய மருத்துவக் கல்லூரி-மருத்துவமனைகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் திருவண்ணாமலையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான விடுதிகளும், கூட்ட அரங்கும் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்படும். சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள புற்றுநோய்த் துறை, உயர் மையமாக தரம் உயர்த்தப்படும். இதற்காக, ரூ.17 கோடி மதிப்பில் 150 உள் நோயாளிகள் தங்கிச் சிகிச்சை பெறும் வசதி கொண்ட புற்றுநோய் மையம் கட்டப்படும்.மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உள்ள மயக்க மருந்தியல் துறை உயர் மையமாக தரம் உயர்த்தப்படும்'' என்றார் அமைச்சர் அன்பழகன்.
கருத்துக்கள்

தனியாருடன் இணைந்து மாவட்டங்கள்தோறும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/20/2010 3:09:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி



சென்னை, மார்ச் 19: பொறியியல் படிக்கும் 1,200 ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் மென்பொருள் மற்றும் ஆங்கிலப் பேச்சு பயிற்சி அளிக்கப்படும் என்று நிதி அமைச்சர் க. அன்பழகன் அறிவித்தார்.வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அவர் வெளியிட்ட அறிவிப்பு:ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். 20 ஆயிரம் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாநில அரசின் சிறப்பு நிதியாக ரூ. 25 கோடி ஒதுக்கப்படும்.பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் 1,200 ஆதிதிராவிடர் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் கம்ப்யூட்டர் மென்பொருள் மற்றும் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி அளிக்கப்படும்.ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு மொத்தமாக ரூ. 894 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் துணைக் கூறு திட்டத்துக்கு 2005-06-ல் ரூ. 567 கோடி ஒதுக்கப்பட்டது.இந்த நிதிநிலை அறிக்கையில் அதற்கான நிதி ரூ.3,828 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மொத்த ஆண்டு திட்ட ஒதுக்கீட்டில் இது 19 சதவீதமாகும்.25 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் விடுதிகளுக்கு ரூ. 12.5 கோடியில் சொந்தக் கட்டடம் கட்டப்படும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க ரூ.198 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.தனியார் கட்டடங்களில் இயங்கி வரும் 25 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மாணவர் இல்லங்களுக்கு ரூ. 12.5 கோடியில் சொந்தக் கட்டடம் கட்டப்படும்.தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுக் கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினரைச் சேர்ந்த தொழில்முனைவோர்களுக்கு ரூ.35 கோடி தொழில் கடன் வழங்கப்படும்.வரும் நிதியாண்டில் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த 12,500 தொழில்முனைவோர்களுக்கு ரூ. 25 கோடி தொழில் கடன் வழங்கப்படும்.கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர்களையும், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க இந்திய அரசியல் சட்டத்தில் தகுந்த திருத்தம் செய்ய வேண்டும் என்றார் அன்பழகன்.
கருத்துக்கள்

சாதி, பண வேறுபாடின்றி வேண்டப்படும் அனவைருக்கும் இலவச ஆங்கிலப் பயிற்சி அளிக்க வேண்டும். அதற்கும் முன்னதாக அனைவருக்கும் தமிழ்ப்பயிற்சியும்அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பயின்றும் தமிழ் தெரியாத நிலை தமிழர்க்கும் அயலவர்க்கும் உள்ள இழிவை முதலில் துடைத்தெறிய வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/20/2010 3:05:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
தேனியில் சிறப்பு மனநல மருத்துவமனை



சென்னை, மார்ச் 19: ""தேனியில் சிறப்பு மனநல மருத்துவமனை அமைக்கப்படும்'' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 2010-2011-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பு:""மன நோயாளிகள் உள் நோயாளிகளாகத் தங்கி சிகிச்சை பெறும் சிறப்பு அரசு மனநல மருத்துவமனை சென்னையில் மட்டும் உள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள மன நோயாளிகளும் சிகிச்சைபெற அந்த மாவட்டங்களுக்குத் தனியாக சிறப்பு அரசு மனநல மருத்துவமனை தேனி நகரில் ரூ.10 கோடி மதிப்பில் அமைக்கப்படும். மறுவாழ்வு இல்லங்களை நடத்தும் தொண்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு நிதியுதவி அளித்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ஒரு மறுவாழ்வு இல்லம் என்ற அடிப்படையில் 10 மறுவாழ்வு இல்லங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும்.யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், இந்த நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு, கால், கை போன்ற உடல் உறுப்புகளைப் பயன்படுத்தவே முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ள 4-வது வகை நோயாளிகளுக்கு மாத உதவித் தொகையாக ரூ.400 தொடர்ந்து வழங்கப்படும்.
கருத்துக்கள்

எல்லா மாவட்டங்களிலும் சிறப்பு மனநல மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/20/2010 3:00:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
மதுரையில் அண்ணா பல்கலைக்கழகம்



சென்னை, மார்ச் 19: ""அரசு கல்லூரிகளில் எம்.ஏ., எம்.எஸ்சி., போன்ற முதுகலைப் பட்டப்படிப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் கல்வியாண்டு முதல் இந்த முறை அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.2010-2011-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சர் க.அன்பழகன் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். அதில், உயர் கல்வி தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:""மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்காக மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும்.விழுப்புரத்தில்: விழுப்புரத்தில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பட்ட மேற்படிப்பு விரிவாக்க மையம் உருவாக்கப்படும். 4 புதிய கலை - அறிவியல் கல்லூரிகள்: மத்திய அரசின் நிதியுதவியுடன் நான்கு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தொடங்கப்படும்.மத்திய அரசு நிதி உதவியுடன் ஏழு புதிய பலதொழில்நுட்பக் கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் தொடங்கப்படும். மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் ஒரு பலதொழில்நுட்பக் கல்லூரியும் வரும் கல்வியாண்டில் தொடங்கப்படும்.முதுகலைப் பட்டப்படிப்பு: அரசுக் கல்லூரிகளில் எம்.ஏ., எம்.எஸ்சி., போன்ற முதுகலைப் பட்டப்படிப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படும். இந்த முறை வரும் கல்வியாண்டில் இருந்து நடைமுறைபடுத்தப்படும்.அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் மூலம் பண்ரூட்டி, தஞ்சாவூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நகரங்களில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.இந்தக் கல்லூரிகளுக்குத் தேவையான கட்டடங்கள் ரூ.93 கோடி மதிப்பில் வரும் நிதியாண்டில் கட்டப்படும். பொறியியல் மற்றும் பலதொழில்நுட்பக் கல்லூரிகளில் 50 வகுப்பறைகள் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்படும். 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆய்வகங்கள் கட்டுவதற்கும், 19 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் ரூ.3 கோடியே 89 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஒரு சிறப்புத் தகுதி மையம் அமைக்கப்படும்'' என்று அறிவித்தார் அன்பழகன்.
கருத்துக்கள்

அனைத்தும் நல்ல திட்டங்களே. பாராட்டுகள்.ஆனால், மழலைக் கல்வியிலேயே தனியார் அடிக்கும் கொள்ளை அரசு அறியாதது அல்ல. தனியாரின் கல்விக் கொள்ளைக்கும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/20/2010 2:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
விழுப்புரத்தில் தொழில் பூங்கா: அமைச்சர் க. அன்பழகன்



சென்னை, மார்ச் 19: விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் மூலம் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் க. அன்பழகன் அறிவித்தார்.இலவச கலர் டெலிவிஷன்கள் வழங்க வரும் நிதியாண்டில் ரூ.500 கோடி ஒதுக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.நிதிநிலை அறிக்கையில் இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) மூலம் ஒரு தொழில் பூங்கா அமைக்கப்படும்.கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 46,091 கோடி முதலீட்டில் 37 புதிய தொழிற்சாலைகளை நிறுவ தொழில் முனைவோர்கள் முனவந்துள்ளனர். இது அரசின் தொழில் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகும். இதனால் சுமார் 2.22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள்கிடைக்கும். அப்பல்லோ டயர்ஸ், எம்.ஆர்.எப்., ஏ.டி.சி. டயர்ஸ், மிஷலின் ஆகிய டயர் தயாரிப்பு நிறுவனங்களைத் தொடர்ந்து ஜே.கே. டயர்ஸ் நிறுவனம் ஸ்ரீபெரும்பூதூரில் ரூ.1,500 கோடியில் டயர் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க முன்வந்துள்ளது.மஹிந்திரா குழுமம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகில் ரூ.1,800 கோடியில் வாகன தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க உள்ளது. ரூ. 4,500 கோடியில் ஆண்டுக்கு 4 லட்சம் கார்கள் தயாரிக்கும் திறன்கொண்ட ரெனோல்ட் நிசான் கார் தொழிற்சாலை காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் மார்ச் 17-ம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது.இந்த நிதிநிலை அறிக்கையில் சிறுதொழில் துறைக்கு ரூ. 98 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

பாராட்ட வேண்டிய திட்டம். ஆனால், இன்றைய வேலையில்லாத் திண்டாட்டத்தைக் க்ருத்தில் கொண்டு தனியாருடன் இணைந்து எல்லா நகரங்களிலும் தொழிற்காலைகள் அமைக்க முன்வரவேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/20/2010 2:54:00 AM

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) மூலம் ஒரு தொழில் பூங்கா அமைக்கப்படுமாம். அதை பாண்டிச்சேரிக்கு அருகே அமைத்தால் நன்றாக இருக்கும். தண்ணி பிரச்சினை இருக்காதுல்லீங்கோ!

By Anbumani
3/20/2010 2:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
தமிழக அரசு அலுவலகங்களை இணையம் மூலம் இணைக்க ரூ. 22 கோடி



தமிழக அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைமை அலுவலகங்கள், மாவட்ட அளவிலான அலுவலகங்கள், கோட்ட, வட்டார அளவிலான அலுவலகங்கள் ஆகியவற்றை இணையம் மூலம் இணைக்கும் தமிழ்நாடு பெரும்பரப்பு வலை இணைப்பு ரூ. 22 கோடி மதிப்பில் விரிவுபடுத்தப்படும்.கோவையில் உருவாக்கப்பட்டு வரும் "டைடெல்' தகவல் தொழில்நுட்பப் பூங்கா பணிகள் வரும் மே மாதத்தில் நிறைவடையும். 2007-08-ல் மென்பொருள் ஏற்றுமதி ரூ.28,426 கோடியாக இருந்தது.2008-09-ல் இது ரூ. 36,680 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு கோடியே 52 லட்சத்து 80 ஆயிரம் இலவச கலர் டிவிக்கள் கொள்முதல் செய்ய ஆணையிடப்பட்டு இதுவரை ஒரு கோடியே 8 லட்சம் கலர் டிவிக்கள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய 44 லட்சத்து 80 ஆயிரம் கலர் டெலிவிஷன்கள் 2010 டிசம்பருக்குள் வழங்கப்படும். இதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அன்பழகன்.
கருத்துக்கள்

பாரட்ட வேண்டிய திட்டம். எனினும் இணையப் பதிவுகள் தொடக்கத்துடன் நின்று விடுகின்றன. அவ்வாறில்லாமல் அன்றன்றைக்குப்பதிவுகள புதுப்பிக்கப்பட்டுப் பொது மக்கள் இணையம் வழியாகத் தகவல் பெறவும் விண்ணப்பிக்கவும் ஆணைகள் பெறவும் வழிவகை செய்ய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/20/2010 2:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு தனித்துறை: விடுதி மாணவர்களுக்கு உணவுப்படி உயர்வு



சென்னை, மார்ச் 19: ""மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக, முதல்வர் கருணாநிதியின் நேரடிப் பார்வையில் தனித்துறை அமைக்கப்படும்'' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான உணவுப்படி ரூ.200 லிருந்து ரூ.450 ஆக உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.2010-2011-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பு: உடல் ஊனமுற்றோர் என்று அழைப்பதற்குப் பதிலாக, அவர்களை "மாற்றுத் திறனாளிகள்' என்று அழைக்கின்ற முறை ஐக்கிய நாடுகள் சபையில் விவாதிக்கப்பட்டு கடந்த 2007}ம் ஆண்டிலேயே அது தொடர்பான இணக்க ஒப்பந்தம் ஏற்கப்பட்டு கையெழுத்திடப்பட்டுள்ளது.இதன்படி, கல்வி, மருத்துவ வசதி, வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு வாழ்வாதார உரிமைகள் அனைத்திலும் அவர்கள் உரிய பங்கு பெற்றவர்களாகவும், சமூகத்தில் சம உரிமையும் வாய்ப்பும் பெற்றவர்களாகவும் வாழ வழி வகுக்க இந்த அரசு ஆவன செய்யும்.1995-ம் ஆண்டு இயற்றப்பட்ட ஊனமுற்றோருக்கான சட்டத்தை ஐக்கிய நாடுகள் இணக்க ஒப்பந்தத்தின் அடிப்படையில் விரைவில் மாற்றி அமைக்க மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.பல்வேறு சலுகைகள்: மாநில அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ""மாற்றுத் திறனாளிகள்'' பெற்றிட நிர்ணயிக்கப்பட்டுள்ள வருவாய் உச்சவரம்பு முற்றிலும் நீக்கப்படும்.மாற்றுத் திறனுடையோர் உயர்கல்வி பயில்வதற்கு ஏதுவாகக் கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டில் இருந்து தனிக்கட்டணம் செலுத்துவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்படும்.அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மாற்றுத் திறனாளி மாணவர் இல்லங்களில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு உணவுச் செலவாக மாதத்துக்கு இப்போது ரூ.200 உதவித் தொகை அளிக்கப்படுகிறது. இந்தத் தொகை ரூ.450 ஆக உயர்த்தப்படும்.மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்த வரும் நிதியாண்டில் ரூ.176 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் முதல்வர் கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில் தனித்துறை அமைக்கப்படும்'' என்றார் அமைச்சர் அன்பழகன்.
கருத்துக்கள்

ஒரு நாளைக்கு ஒரு வேளைக்கு ஏறத்தாழ 5 உருபாய்தான் படித் தொகை என்பது மிக மிகக் குறைவு. இன்றையா விலை வாசியைக் கருத்தில் கொண்டு இத் தொகையை உயர்த்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/20/2010 2:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
22 தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமை: தமிழக அரசு



சென்னை, மார்ச் 19: ""தமிழகத்தில் 22 தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும்'' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.2010-2011-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பு: திமுக அரசு பொறுப்பேற்ற பின், 87 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இதற்காக, அவர்களின் மரபு உரிமையர்க்கு ரூ.5.7 கோடி பரிவுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.வரும் நிதியாண்டில் 22 தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படவுள்ளன. பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம், பேராசிரியர் அ.கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் எஸ்.எம்.கமால், ப.ராமசாமி, பேராசிரியர் ர.சீனிவாசன், வ.சு.செங்கல்வராய பிள்ளை, கவிஞர் வெள்ளியங்காட்டான், நெ.து.சுந்தரவடிவேலு, டாக்டர் சி.பாலசுப்பிரமணியன், மயிலை சிவமுத்து, காழி சிவ.கண்ணுசாமி பிள்ளை, கே.பி.நீலமணி, கவிராஜ பண்டிதர் ஜெகவீரபாண்டியன், அ.திருமலைமுத்துசாமி, நவ்ராஜ் செல்லையா, திருகூடசுந்தரம், பேராசிரியர் சுந்தர சண்முகனார், தஞ்சை ராமையாதாஸ், கவிஞர் தாராபாரதி, அருதனக்குட்டி அடிகளார், சரோஜா ராமமூர்த்தி, அ.சீனிவாசன் ஆகியோரின் படைப்புகள் என மொத்தம் 22 சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும்.
கருத்துக்கள்

பாராட்டுகள். இருப்பினும் இதுவரை நாடடுடைமையாக்கப்பட்ட நூல்களை அரசே குறைந்த விலைக்குக் கிடைக்கும் வகையில் அச்சிட்டுப் பரப்பினால் நன்று.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/20/2010 2:41:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
தமிழக பட்ஜெட்: முதுநிலை படிப்புக்கு கட்டணம் ரத்து



சென்னை, மார்ச் 19: புதிய கட்டடத்தில் தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. சட்டப் பேரவைக் கட்டடத்தை கட்டுவதற்கு முயற்சி எடுத்துக் கொண்ட அனைவருக்கும் பேரவைத் தலைவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.அதன் பிறகு நிதியமைச்சர் க. அன்பழகன் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.உரையின் முக்கிய அம்சங்கள்:
  • தமிழகத்தில் வேளாண் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
  • வட்டியில்லாப் பயிர்க்கடன் தொடரும்
  • கரும்பு கொள்முதல் விலை கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.1550-லிருந்து ரூ. 1650 ஆக உயர்த்தப்படும்
  • நெல் கொள்முதல் விலை உயர்வு: சாதாரண ரக நெல்லுக்கு ரூ.1050, சன்னரக நெல்லுக்கு ரூ.1100
  • சொட்டு நீர்ப்பாசனத்திட்டம் மேலும் 75 ஆயிரம் நிலம் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும்
  • இலவச மின்சாரம் வழங்க மின்வாரியத்துக்கு ரூ.295 மானியம் கோடி ஒதுக்கீடு
  • இயற்கை வழி விவசாயத்தை பின்பற்றும் விவசாயிகளுக்கு பரிசுகள்.
  • விவசாய சுயநிதிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு
  • சோற்றுக்கற்றாழையில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு வரிவிலக்கு.
  • பாக்குமர இலைத் தட்டுகளுக்கு வரிவிலக்கு.
  • வீடு கட்டப் பயன்படும் பனைச் சட்டங்களுக்கு வரி விலக்கு.
  • பரம்பிக்குளம் - ஆழியாறு கால்வாய் சீரமைக்க ரூ.127.5 கோடி ஒதுக்கீடு.
  • தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டத்திக்கு ரூ.126 கோடி ஒதுக்கீடு
  • காவிரி ஆற்றில் கதவணை அமைக்க ரூ.103 கோடி ஒதுக்கீடு
  • தமிழக ஆறுகளில் வெள்ளத்தடுப்புத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி.
  • நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்கும் திட்டங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
  • ஏரிகளைப் சீரமைக்க ரூ.439 கோடி
  • முல்லைப் பெரியாறு ஆய்வுக் குழுவை ஏற்பதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை
  • வரி வருவாயில் தென் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் பங்கீடு குறைப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
  • சேது சமுத்திர திட்டப் பணிகளை உடனே நிறைவேற்ற மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு
  • உணவு மானியத்துக்கு ரூ.3750 கோடி ஒதுக்கீடு
  • இலங்கை அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
  • காவல்துறைக்கு வரும் நிதியாண்டில் ரூ.2962 கோடி ஒதுக்கீடு.
  • ரூ. 120 கோடி நிதியில் 2000 காவலர் குடியிருப்புகள் கட்டப்படும்
  • 200 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும்.
  • பள்ளிக்கல்விக்கு ரூ.10 ஆயிரத்து 148 கோடி ஒதுக்கீடு.
  • 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச அகராதிகள் வழங்கப்படும்
  • 1 லட்சத்து 27 ஆயிரம் மாணவர்களுக்கு தொழில்திறன் மேம்பாட்டுப் பயிற்சி
  • மதுரையில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடங்கப்படும்.
  • அரசுக் கல்லூரிகளில் முதுநிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து.
  • வர்த்தகச் சின்னம் இடப்படாத காபித்தூளுக்கு வரிக் குறைப்பு
  • பெயிண்ட் பிரஷுக்கு வரிக் குறைப்பு
  • சென்னை வெளிவட்டச் சாலை பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
  • கோவை போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மேற்கு வெளிவட்டச் சாலை ரூ. 284 கோடி செலவில் 4 வழிச் சாலையாக 26 கி.மீ.தூரத்துக்கு பொதுத்துறை சார்பில் அமைக்கப்படும்.
  • கோவை - மேட்டுப் பாளையம் இடையே நான்குவழிச் சாலை அமைக்கப்படும்
  • கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வரும் நிதியாண்டில் ரூ. 1800 கோடி செலவில் 3 லட்சம் வீடுகள் கட்டப்படும்.
  • கோவை தொழில்நுட்பப் பூங்கா பணிகள் மே மாதத்தில் நிறைவடையும்.
  • விழுப்புரம் மாவட்டத்தில் புதிய தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.
  • மேலும் புதிதாக 36 சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்.
  • மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களுக்கு கல்லூரிகளில் சிறப்புக் கட்டணம் ரத்து
  • மீனவர்கள் பயன்படுத்தும் ஐஸ் கட்டிகளுக்கு வரிவிலக்கு
  • மனநோயாளிகளைப் பராமரிக்கும் மறுவாழ்வு இல்லங்களை நடத்தும் தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி.
  • புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் புதிய அரசுக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
  • திருவண்ணாமலையில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.
  • மாற்றுத் திறனுடையோருக்கென தனித்துறை முதல்வர் கருணாநிதி தலைமையில் செயல்படும்.
  • மாற்றுத் திறனுடையோருக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை ரூ.200-ல் இருந்து 450-ஆக உயர்வு.
  • சென்னை கோயம்பேட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படும்.
  • பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினத்தைச் சேர்ந்தவர்கள் தொழில் தொடங்க உதவி செய்வதற்காக ரூ.32 கோடி ஒதுக்கீடு
  • தையல் பொருள்களுக்கு வரிக்குறைப்பு.
  • தேனியில் ரூ. 10 கோடி செலவில் சிறப்பு மனநலை மருத்துவமனை அமைக்கப்படும்.
  • கர்ப்பிணிகளுக்கு அயோடின் கலந்த உப்பு இலவசம்.
  • தியாகி வாஞ்சிநாதனுக்கு செங்கோட்டையில் மணி மண்டபம்.
  • விருப்பாச்சியில் கோபால் நாயக்கருக்கு மணி மண்டபம்.
  • விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டி வீரனுக்கு நெல்லையில் மணி மண்டபம்.
  • கோவையில் தகுதியுள்ள பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும்
  • எம்.கே. தியாகராஜ பாகவதரின் நூற்றாண்டுவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.
  • அரவானிகள் நலத்திட்டங்களுக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு.2010 -11 நிதிநிலை மதிப்பீடு மொத்த வருவாய் - ரூ. 63,091.74 கோடிமொத்தச் செலவு - ரூ. 66,488.19 கோடிபற்றாக்குறை - ரூ. 3,396.45 கோடி
கருத்துக்கள்

அனைவருக்கும் கல்வி இலவசம் என்னும் நிலைப்பாட்டை முதுகல்வி வரை கொண்டு வந்ததற்குப் பேராசிரியரைப் பாராட்டலாம். தினமணியில் இரா.செழியன் அவர்கள் கோரிக்கை வைத்ததை ஏற்று எம்.கே. தியாகராச பாகவதர் அவர்களின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்குத் தினமணி நன்றி தெரிவிக்கலாம். (இருப்பினும் இவர் திரைப்படத்துறையைச் சார்ந்தவர் என்பதால்தான் விழா கொண்டாடுகிறார்கள். இல்லையேல் தமிழறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழாவையும் அறிவித்து இருப்பார்கள் எனத் தமிழன்பர்கள் தெரிவிப்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.) என்றாலும் எத்தனை சிறப்பான வரியற்ற நிதிநிலை அறிக்கையை அளித்தாலும் என்றும் இரண்டாவமர் என்னும் நிலையில் இருந்து மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டவர் விளம்பரங்களில் படமோ பெயரோ இல்லாத வகையில் தலைவரின் குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தச் செலு்த்தத் தம் நிலையில் இருந்து சரியும் வகையில் ஆட்சியைச் செலுத்துவது வருத்தமாக உள்ளது.ஆகவே, மேற்கொண்டு நிதிநிலை யறிக்கை குறித்து ஒன்றும் தெரிவிக்க வில்லை.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/20/2010 2:20:00 AM

Tamilan, I am not from BJP or any party.. i temporarily reside in Bangalore for my work.. I am proud to be Tamil and will always be, that doesnt mean we should live with false pride and accept wrong things. You think these freebies is good for TN? Is there no power problems in TN. TN has the only advantage of Good colleges and schools, that too would soon disappear due to corrupt management and wrong govt policies. Cash for vote and corruption was less in TN before the karunandhi goverment.. now in last bye election in my district most of people got 1000rs/vote. do you think its a healthy trend.? and lastly i am now in Bangalore.. i can say Chennai is 20% more costly than here. why? everything rent, vegetables, milk, hotels etc..

By Arunagiri
3/20/2010 12:51:00 AM

u have missed the amount u r going to spend for ur health care this year (Rs 500 Cr)?

By moorthy
3/20/2010 12:47:00 AM

முத்தமிழை வித்தவர்! மன்னிக்கவும்... பாராட்ட வர்த்தைகளே இல்லை அதனால் பாராட்டவில்லை. ஏப்ரல் மாதம் மின்கட்டணமும் உயரப் போகுது அப்போது பார்க்கலாம்.

By Unmai
3/19/2010 11:07:00 PM

People like subbu and arunagiri should be BJP people why the hell yedurappa comming for TN secratariat function, go and ask him he will explain the secret support he requires from MK just to hold on to government in Karnataka. It is a good budget where all the taxes where slashed from 12.5% to 4% which will benefit all section of the society considering the price rise. Every body knows price rise is not only for Tamil nadu it is across the country. TN government is taking care including the pysically challenged people. These are scoundrels who have hidden agenda. I see some people saying MK is not tamilian etc, Assume they don't tell Jaya a kannadiga, MGR an Keralite, Vaiko a telugu person as tamilian and MK a son of mutuvelar a non tamilian, I understand how difficult Anna would have fougt for democracy with so much of non thinking people around. Go and ask the true tamilan Prabhakaran he will tell even after the happening MK is a Tamilan without a doubt.

By tamilan
3/19/2010 11:01:00 PM

What a pity? Thamizhs, original inhabitant of the land, to live in Thamizh Nadu has to get approval from Vadanaatavargal? Don't you think it is against your party's policy, that Thamizhs should be ruled by Thamizhs and not by other Races. In any case, please do not call / mention the displaced Thamizhs (from Thamizh Ezham) as "AGATHIGAL or REFUGEES", they are "Pulam Peyarntha Makkal". They are not foreigners, but our compatriots.

By Raja
3/19/2010 10:53:00 PM

nanraha sonneerhal subbu. We expect good governance.. not freebies, this CM had lost his mental balance, they should learn from Karnataka Yeddiyurappa.. in the last one year theres exceptional infrastructure development. Chennai will be no where compared to Bangalore in another 2 years. Freebies can be given, but only to drive a purpose. MGR and Kamarajar gave Free meals for making students come to schools.. that really made TN a forward state.. but the current freebies like TV, Gold, 1rsRice may get some votes but will make people lazy and look for more freebies.

By Arunagiri
3/19/2010 10:36:00 PM

பிச்சைக்கரர்களுக்கான பட்ஜெட் .நல்ல குடி நீர் ,விபத்து இல்லாத நல்ல சாலை ,வாகன ஒழுங்கு முறை ,கொலை கொள்ளை இல்லாமல் காவல் துரின் பாதுகாப்பான கண்காணிப்பு ,லஞ்சம் இல்லாமல் நடக்கும் அரசாங்கம் ,மாசு இல்லாத சுத்தமான காற்று,எங்கும் பசுமை ,தூய்மை பொது மக்கள் இதை தான் எதிர் பார்க்கிறோம் .பிச்சை,அகராதி ,டி.வீ ,இதெல்லாம் இல்லை .

By subbu
3/19/2010 9:17:00 PM

agri & infrastrecture department budget is just satisfication but education and health, human resource and employment, culture, power and security division budget is so BAD.

By karthikeyan
3/19/2010 8:08:00 PM

YEN INNIYA THAMILE MAKKALA, KARUTHUKKAL SOLLA VENDAM, UNGAL KARUTHAI ELECTION IL PATHEVU SEIYUNGAL. PANATHIRKAGA ALLA ORU THAMILANUKKAGA.

By karthikeyan
3/19/2010 7:57:00 PM

It is a pity to note that even a single nayapaisa is not allotted for HR&CE deoartmnent

By N R RAvISANKAR
3/19/2010 7:37:00 PM

பாடபுத்தகம் இலவசம், படிப்பும் இலவசம், பள்ளி செல்ல பஸ் பாசும் இலவசம், தேவையென்றால் சைக்கிளும் இலவசம். பெண் பருவமடைந்தால் திருமண உதவித்தொகை 25000 இலவசம், ஒரு பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம், தேவையென்றால் மாப்பிள்ளையுடம் பேப்பரில் விளம்பரமும் இலவசம், மகள் பிள்ளை பெற்றால் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும், நான் எதற்கு உழைக்க வேண்டும் !! வியந்து போனேன் நான்!! என் உயிர் தமிழகமே எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்? இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையுட்டு, மற்றொன்று பிச்சை !!! இதில் நீ எந்த வகை? எதை எடுத்துக்கொள்வது? உழைக்காமல் உண்டு சொம்பெரிகளகிறாய், இலவசம் நின்று போனால், உன் நிலை ? உழைப்பவர் சேமிப்பை களவாட தலைபடுவாய் ! இதே நிலை தொடர்ந்தால் - இலவசம் வளர்ந்தால் அமைதி பூங்கவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு - உழைத்திடு இலவசத்தை வெறுத்திடு - அழித்திடு தமிழகத்தை தரணியில் உயர்த்திடு !!! நாளைய தமிழகம் நம் கையில் உடன்பிறப்பே சிந்திப்பாயா !!! மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி !!! Artic

By Jack
3/19/2010 6:47:00 PM

இன்றைய தமிழகம் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார் - எதற்காக இத்தனை கஷ்டபடுகிறாய் ? நான் கேட்டேன் - கஷ்டபடாமல் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும் ! அவர் சிரித்தபடி சொன்னார் - என்னைப்பார் , ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன், போரடித்தால் வண்ணத் தொலைகாட்சியில் படம் பார்த்திடுவேன், உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன், உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன் !!! உழைக்காமல் எப்படியப்பா இதனையும் முடியும் ? முதலாமவர் சிரித்தபடி சொன்னார், நான் யார் தெரியுமா ? தமிழ் நாட்டு குடி மகன், என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ருபாய் , சமைப்பதற்கு கேசும் அடுப்பும் இலவசம் , பொழுது போக்கிற்கு வண்ண தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம், குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம், எதற்காக உழைக்க வேண்டும்? நான் கேட்டேன் - உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன ? பலமாக சிரித்தபடி உரைத்தார் ! மனைவி பிள்ளை பெற்றால் 5000 இலவசம் சிகிச்சையுடன், குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில், படிப்பு சீருடையுடன், மதிய உணவும் இலவசம

By Jack
3/19/2010 6:45:00 PM

அந்த கால பழமொழி ஒன்று உள்ளது பெருமைக்கு ஆடு அடித்து பிள்ளைக்கு கொடுத்தானாம் புடூக்கை. இலவசம் என்கிற சூனியம் தமிழ்நாட்டை (க்கு) வைத்தாகிவிட்டது . இனி தமிழத்தில் சட்டம் ஒழுங்கு இருக்காது, வளர்ச்சி பணிகள் இருக்காது, வேலை வாய்ப்பு இருக்காது, மக்கள் இலவசம் என்கிற சூனியத்தால் சிந்திக்க மறுப்பார்கள், எதிர் கேள்வி கேட்கமாட்டார்கள் கொலை , கொள்ளை சிறப்பாக இருக்கும் குத்தட்டத்துடன் இலவச சூதாட்டமும் அமோகமாக நடக்கும். இனி ஒரு கன்னிப்பெண் ரோட்டில் சுதைந்திரமாக நடக்கமுடியாது - இன் நிலையில் தி மு கா சிறப்பான ஆட்சி செய்யும். இனி ஆண்டவனே வந்தாலும் தமிழ்நாட்டை காப்ற்றமுடியது என்பது திண்ணம்.

By படிக்காதவன்
3/19/2010 6:33:00 PM

மஞ்சத்துண்டாருக்கு, ஒரே ஒரு படம் போதவே போதாது! ஆறு முகம் படைத்தவருக்கு..1.இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட உண்ணாவிரதம் இருந்து 'சாதித்ததற்காக' ஒன்று 2,ஜெமினி மேம்பாலம் கட்ட லஞ்சம் கேட்டார் என சர்காரியாக் கமிஷனிடம் புகார்கொடுத்தவரை மன்னித்து ,புதிய சட்டசபை மட்டுமல்லாமல் பெரிய நூலகம் கட்டும் காண்ட்ராக்டும் அவருக்கே அளித்த பெரியமனதிற்காக ஒன்று 3. நல்லகுடும்பத்தலைவராக, வாரிசுகளுக்கு மத்திய மந்திரி பதவிக்காக உடல்நலக்குறைவைப் பொருட்படுத்தாமல் வீல்சேரில் டெல்லிக்கே பறந்து சாதித்ததற்க்காக ஒன்று4. தமிழ்பட உலகிலேயே ரெக்கார்டாக ஓடாத ஒருபடத்துக்கு வசனம் எழுத 50 லட்சம் வெள்ளையில் பெற்றமைக்காக ஒன்று 5.100 கோடி ரூபாயில் தமிழ்நாடு கேபிள் கார்ப்பரேஷன் அமைத்து அதனை குப்பையில் போட்டமைக்காக.ஒன்று.தாய் மொழி தெலுங்கெனினும் பிழைப்புக்காக வந்த இடத்துமொழிக்காக (அரசியல் சட்டத்தில் இடம்பெறாவிடினும்) செந்தமிழ்மாநாடு நடத்தி சம்பாதிக்கும் திறமைக்காக ஒன்று ஆக குறைந்தபட்சம்6 படங்களாவது வைக்கவேண்டும்.. .

By MANI
3/19/2010 3:22:00 PM

I hope Rajabakshe has not paid money to make Srilankan refugese as permenant Indian citizens.

By KK
3/19/2010 3:12:00 PM

A lot of money!!!!! US $13 billion. Where all the monies go? No development in infrastructures, electricity, water, roads, etc.......? Tax payers money should not spend for party's wishes to remain in power. Free TVs, housing to cinefield.... This man should go.

By Expat tamil
3/19/2010 2:52:00 PM

what is the use of silai and manimandapams?Is it to use for hunger

By sreekumar
3/19/2010 2:49:00 PM

coimpatore mettupalayam road super but what about kanyaumari kaliyakkavila road?

By ramanmartandam
3/19/2010 2:44:00 PM

PLEASE DO SOMETHING DIFFEREND

By RAJ
3/19/2010 2:33:00 PM

மொத்தத்தில் தமிழக அரசால் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது நிதிநிலை அறிக்கை அல்ல, ‘நிலைகுலை’ அறிக்கை.

By jj
3/19/2010 1:48:00 PM

முதுநிலை படிப்புக்கு கட்டணம் ரத்து ???? MODALLA ARRAMBA KALLVIKU RATTHU PANNU

By minnel
3/19/2010 1:22:00 PM

GUYS DO NOT THINK ABOUT DEFICIT IN BUDGET AMOUNTING TO 3300 CRORES OF RUPEES AND THE MAGNITUDE OF PROBLEM IT IS GOING TO CREATE TO PUBLIC. WHAT GOOD OF NISSAN PLANT WHICH WILL GIVE EMPLOYMENT TO 200 PEOPLE AND WILLL BE USEFULFOR UPPER MIDDLE CLASS.ARE ALL TAMILIANS UPPER CLASS ?LET US WAIT FOR FULL BUDGET

By S Raj
3/19/2010 1:17:00 PM

வெளீநாட்டு தமிழனுக்கு ஒண்ணும் இல்ல, ஆணா அவன் பணம் மட்டும் வேணும், அடுத்த தேர்தலில் தெரியும் (All NRI organizations are decided to reject the party which is not doing anything for NRI, their family will not vote for them, and they send a request to ADMK to consider NRI if they do something, after next election DMK will be no more)

By Vijay
3/19/2010 1:10:00 PM

bad budget of the world and universal history !!!! by Nallaasiriyar S.BASHEER AHAMED M.A,M.Ed,Mpil; AND SORIYAN ALIAS A.L.SHAHUL HAMEED CRAFT INSTRUCTOR MUSLIM HR SEC SCHOOL, ABIRAMAM-623601

By SORIYAN ALIAS A.L.SHAHUL HAMEED
3/19/2010 1:09:00 PM

What is the use of "Silai and Manimandabams"? who asked this useless things? this is wasting public tax money!!govt can do some other best things for public instead of wasting money for such as above non sense SILAI & MANI MANDABAM!!

By Jaleel
3/19/2010 1:09:00 PM

As usual DMK's people oriented budget taking the weeker section into account. For a change budjet doesn't speak about job opportunity but the government parallely opens NISAN car plant, may be BMW next year and job fare etc., Good work last year anbazagan called on NRI Tamils to develop business as part of it MK Stalin has announced Sholigur the financial hub. Hope jelous people who doesn't want Tamil to grow succed are defeated completely. Good work DMK. Jai Hind.

By Tamilan
3/19/2010 1:07:00 PM

very very good budget

By nosaiyaa, pums , achangulam
3/19/2010 1:00:00 PM

very good budget

By nosaiyaa
3/19/2010 12:59:00 PM

..paravaillai.aanal thamilaga sutrula thalangal matrum koilkalil sutri thirium pitchikararkalai patri yosiungal.ayal nattavarkal ingu varumbodu, avargaluku namadu ennangali kattum kannadiyaha ivargal ullanar.atharkaga ivargalai...............ALIKKA VENDAM..VALVU ALIUNGAL.

By bass
3/19/2010 12:54:00 PM

NRI's are not considered in Tamilnadu government. Because they do not have VOTE. If you have vote, Tamilnadu politicians will drink your urine also. Let NRI's family should not vote for DMK as well as ADMK. SEE KERALA, if they not do anything for NRI, they cannot get single vote from their family

By RAJU
3/19/2010 12:49:00 PM

DMK not having confidence with out free or support of Cine Industries will not come to rolling party.

By pandaravadai Ilyas
3/19/2010 12:48:00 PM

TAMIL NADU IS ROLL MODEL OF ALL STATES.............

By Ganapathy
3/19/2010 12:46:00 PM

ok, very good , Nalla Budgjet

By perumal gopal
3/19/2010 12:43:00 PM

pl ensure no fee in studies , this will make more people to gain knowledge . For books , BETTER YOU CHARGE MONEY , OTHERWISE THAT TOO LEAVE IT TO THE STUDENT . THIS NO FEE SCHEME SHOULD BE EXTENDED TO DISTANCE EDUCATION SCHEME TOO . GOOD BUDGET , GOVT SHOULD INCREASE THE REVENUE BY THE WAY OF MORE TAXATION TO OTHER STATE PEOPLE . MORE MONEY , MORE FACILITIES TO OTHER STATE PEOPLE LIVING IN TAMILNADU

By MKA
3/19/2010 12:42:00 PM

what about IT company improve in this budget?.....

By Ramesh
3/19/2010 12:40:00 PM

yallam ok 1) firstla arramba kalive anivarukkum free yaa kodu .... 2) press karanuku yanna elavasa plot ice virea? 3) NRI IKU NEE YANNA PANNUNA? NRI KU PLOT KODU 10YEARS RETURN NRI KU JOB KODU BENSON KODU NRI DOLLER MATTUM ONGALUKU VANNUM ?

By MINNEL
3/19/2010 12:39:00 PM

what are the uses in the budjet to farmers. totally waste in the goverment.

By bala .c
3/19/2010 12:38:00 PM

Earakai valathai uruvakka budjettil idam illai

By williams
3/19/2010 12:37:00 PM

Who will study in goverment arts college? what will be use of this degree later?

By Kannan
3/19/2010 12:33:00 PM

In a way this Budget is okay. But for a long period, there is a section of the people who are continually neglected. Those people are pensioners. Those retired on or before 2000 are getting a very meage pension; whereas the prices of groceries, vegetables, house rent and hospital expenses have sky rocketed. Those who retired recently would have benefited by the governments announcement of increased DA etc. But the people I am referring to were drawing a very low salary. Especially the teachers who now have no support from their children. Will this Government look into the matter and enhance the pensions of the retired teachers at least?

By Joevalan Vaz Chennai
3/19/2010 12:31:00 PM

COIMBATORE MARUDHAMALAI ROAD MUST BE BROADEND, BECAUSE 2 UNIVERSITIES, LAW COLLEGE AND DEVASAM ALSO ABOUT 1 LAKH PEOPLES RESIDING OVER THERE. SO ROAD WIDENING IS VERY MUST.THIS BUDGET ALSO NEGLECTED SUCH SCHEMES.

By saralanair
3/19/2010 12:28:00 PM

ETHIRPARTHATHU POL ILLAI ITHU INTHA ANDIN MIGA MOSAMANA BUDGET USELESS BUDGET

By Naren
3/19/2010 12:27:00 PM

What about job opportunity in this budget

By Samy
3/19/2010 12:20:00 PM

NALLA BUDGET NALLA MANSULLAVAR THANTHA NAYAMANA BUDGET THAMILAGAM ENTRUM UNGALODU ! VETHANYIL PULAMBUM ANBARKALUKKU EN ANUTHABANGAL !!! SYED ALI, MUSCAT.

By syed ali
3/19/2010 12:08:00 PM

nothing useful.

By rv
3/19/2010 11:45:00 AM

no news for industries, employment.

By SIDDHARTHAN
3/19/2010 11:42:00 AM

IDHU ORRU VASAKKANAMANA SAMBRIDHAYAM

By kathir
3/19/2010 11:33:00 AM

coimbatore metupalayam four way road. super

By covai kudimagan
3/19/2010 11:17:00 AM

What about job opportunity in this budget....!!!!!!!!!!

By satbabu.K vellore
3/19/2010 11:09:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்